எல்லா பக்கமும் செக் வைத்த நெதன்யாகு : திணறும் ஈரான்
இஸ்ரேல் ஈரான் இடையே நாளுக்கு நாள் பதற்றம் அதிகரித்து வரும் நிலையில் தெஹ்ரானின் வான் பரப்பு முழுவதையும் தனது கட்டுப்பாட்டில் கொண்டு வந்து விட்டதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது.
மத்திய கிழக்கு பிராந்தியத்தில் இப்போது பதற்றம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இத்தனை காலம் ஹமாஸ், ஹிஸ்புல்லா, ஹவுதி எனத் தீவிரவாத அமைப்புகளுக்கு எதிராக இஸ்ரேல் போரிட்டு வந்தது.
இப்போது நேரடியாகவே ஈரானுக்கு எதிராகவே மோதலை ஆரம்பித்துள்ளது. இரு நாடுகளும் மாறி மாறி தாக்குதல் நடத்தி வருவதால் பதற்றம் அதிகரித்து வருகிறது.
தொலைதூர ஏவுகணை
இதற்கிடையே ஈரான் தலைநகரான தெஹ்ரானின் வான் பரப்பு முழுவதையும் தனது கட்டுப்பாட்டில் எடுத்துவிட்டதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது.
அதேநேரம் ஈரான் இதை இன்னமும் உறுதி செய்யவில்லை. இருப்பினும், இஸ்ரேல் விமானப்படை கடந்த சில நாட்களாக தெஹ்ரான் மீது பல தாக்குதல்களை நடத்தியுள்ள நிலையில், இது உண்மையாகவே இருக்கக்கூடும் என்று கருதப்படுகிறது.
இஸ்ரேல் இப்போது ஜெட் விமானங்களைப் பயன்படுத்திக் குறுகிய தூர வழிகாட்டுதல் ஏவுகணை மூலம் மட்டுமே தாக்குதல் நடத்துகின்றன. இதுவரை தொலைதூர ஏவுகணைகளை இஸ்ரேல் பயன்படுத்தவில்லை.
எனவே, அதைப் பயன்படுத்தத் தொடங்கினால் இஸ்ரேலின் கை இன்னுமே ஓங்கும் என்பதும் குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
