அபாயமான கட்டத்தை அடையும் ஈரான் இஸ்ரேல் யுத்தம் : பற்றி எரியும் மத்திய கிழக்கு
ஈரான் இஸ்ரேல் யுத்தம் ஒரு அபாயமான கட்டத்தை அண்மித்திருக்கிறது. தொடர்ச்சியான இழப்புகளை இரண்டு நாடுகளும் சந்தித்து வரும் நிலையில் இஸ்ரேல் ஈரானில் தனிநபர் இலக்குகளை குறிவைத்து தாக்கி வருகிறது.
ஈரானின் முக்கிய எரிவாயுக்கிடங்கு,எண்ணெய் சேகரிப்பு நிலையம் என தொடங்கி இராணுவ புலனாய்வு உயர்முகங்களும் குறிவைத்து அழிக்கப்படுகிறார்கள்.
இந்நிலையில் இந்த யுத்தம் வெளி உலகத்தின் பார்வையில் ஒரு கோணத்திலும் உள்ளே இடம்பெறுவது இன்னொருவிதமாகவும் நகர்கின்றது.
இன்று காலை இஸ்ரேலில் உள்ள அமெரிக்க தூதரகம் தாக்கப்பட்டதாக அமெரிக்க தூதர் அறிவித்திருந்தார்.
ஏற்கனவே அமெரிக்காவுக்கு ஈரான் கொடுத்த எச்சரிக்கையும் டொனால்ட் ட்ரம்ப்பின் அச்சுறுத்தலும் ஒரு பேசுபொருளான நிலையில் இந்த யுத்தம் அடுத்து என்ன. கட்டத்தை அடையப்போகிறது என்பது தொடர்பில் ஆராய்கிறது IBCதமிழின் இன்றைய அதிர்வு.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
