ஈரான் கையில் சிக்கிய இஸ்ரேலின் முக்கிய புள்ளிகள் : வெளியான அதிர்ச்சியூட்டும் தகவல்
மத்திய கிழக்கில் பதற்றம் அதிகரித்து வரும் நிலையில் தற்போது இஸ்ரேலின் இரண்டு மொசாட் உளவாளிகள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
அணடமைய நாட்களாக ஈரான் (Iran) - இஸ்ரேல் (Israel)மோதல் என்பது அதி உச்சத்தை அடைந்துள்ளது.
மொசாட் அமைப்பு
அணு ஆயுதத்தை தயாரிப்பதில் ஈரான் தீவிரமாக செயற்பட்ட நிலையில், அது தங்களுக்கு அச்சுறுத்தலாக இருப்பதாக கூறி ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல் மேற்கொண்டது.
இரு நாடுகளுக்குமிடையில் போர் பதற்றம் அதிகரித்து வரும் நிலையில் இஸ்ரேலின் மொசாட் அமைப்பின் இரண்டு நபர்களை ஈரான் கைது செய்துள்ளதாக இஸ்ரேலின் செய்திகளை மேற்கொள் காட்டி செய்திள் வெளியாகியுள்ளது.
அல்போர்ஸ் மாகாணத்தில் வெடிபொருட்கள் மற்றும் மின்னணு சாதனங்களைத் தயாரித்துக் கொண்டிருந்தபோது இவர்கள் கைது கைது செய்யப்பட்டுள்ளாதக ஈரானின் அரச ஊடகம் ஒன்றும் செய்தி வெளியிட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
