ஜெருசலேமின் ஐ.நா. நிவாரணப் பணி தளத்தின் மீது இஸ்ரேல் தாக்குதல்
ஆக்கிரமிக்கப்பட்ட கிழக்கு ஜெருசலேமின் வடக்கே உள்ள காஃப்ர் அகாப் பகுதியில் அமைந்துள்ள ஐ.நா. நிவாரணப் பணி முகமையின் (UNRWA) மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியுள்ளதாக ஹமாஸ் அமைப்பு கூறியுள்ளது.
அங்குள்ள தொழிற்பயிற்சி மையங்களில் இருந்து மக்கள் வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்டமை குறித்தும் ஹமாஸ் கண்டனம் வெளியிட்டுள்ளது.
இது பாலஸ்தீனிய மக்களுக்கு எதிரான திட்டமிட்ட மற்றும் தொடர்ச்சியான ஆக்கிரமிப்பின் திட்டம் எனவும் ஹமாஸ் கவலை வெளியிட்டுள்ளது.
ஐ.நா. தீர்மானங்கள்
ஹமாஸின் டெலிகிராம் கணக்கில் வெளியிடப்பட்ட ஒரு அறிக்கையில், “இந்தத் தாக்குதல் ஐ.நா. தீர்மானங்களுக்கும் சர்வதேச மரபுகளுக்கும் ஒரு அப்பட்டமான சவால்.

இந்த அப்பட்டமான ஆக்கிரமிப்பை நாங்கள் கண்டிக்கிறோம். மேலும், இந்த மீறல்களைத் தடுத்து நிறுத்தவும், சியோனிச அமைப்புக்கு எதிராகத் தடுப்பு நடவடிக்கைகளை விதிக்கவும், ஐ.நா. நிவாரணப் பணி முகமையைப் (UNRWA) பாதுகாப்பதிலும் அது தனது பங்கை ஆற்றுவதற்கு வழிவகுப்பதிலும் தமது பொறுப்புகளை நிறைவேற்றவும் சர்வதேச சமூகத்தையும் ஐக்கிய நாடுகள் சபையையும் உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்” என கூறியுள்ளது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |