அமெரிக்காவில் கைது செய்யப்படுவாரா நெதன்யாகு..! நியூயோர்க் மேயரின் அறிவிப்பால் பரபரப்பு
ஐக்கிய நாடுகள் உச்சி மாநாட்டிற்காக நியூயோர்க் நகருக்கு வரும் இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவைக் கைது செய்ய எதிர்பார்ப்பதாகவும், அவ்வாறு செய்வதற்குத் தனக்கு அதிகாரம் உள்ளதா என்பது தெரியாததால் இது குறித்து சட்ட வல்லுநர்களுடன் விவாதித்து வருவதாகவும் நியூயோர்க் மேயர் ஸோஹ்ராப் மம்தானி தெரிவித்துள்ளார்.
நெதன்யாகு ஒரு போர்க் குற்றவாளி என்றும், அவர் மீது சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட வேண்டும் என்றும் மம்தானி கூறினார்.
நெதன்யாகு ஒரு போர்க் குற்றவாளி
இது தனது கருத்து மட்டுமல்ல, நெதன்யாகுவைப் பற்றி பலரும் கொண்டிருக்கும் கருத்தும் இதுவே என்று அவர் குறிப்பிட்டார். நியூயோர்க் மேயர் என்ற முறையில் தனது சட்டபூர்வ அதிகாரங்களைப் பயன்படுத்தி நெதன்யாகுவுக்கு எதிராக தன்னால் இயன்ற அனைத்தையும் செய்வேன் என்றும் மம்தானி கூறினார்.

தனது மேயர் தேர்தல் பிரச்சாரத்தின் போது, நெதன்யாகு நியூயோர்க் நகரத்திற்கு வந்தால் அவரைக் கைது செய்வேன் என்றும் மம்தானி கூறியிருந்தார்.
இஸ்ரேலின் பதிலடி
மம்தானியின் இந்தக் கூற்றுக்கு இஸ்ரேல் உடனடியாகப் பதிலளித்தது. இஸ்ரேலுக்கான அமெரிக்கத் தூதர் டேனி டானன் தனது ட்விட்டர் கணக்கில், மம்தானி மேயராகத் தனது பொறுப்புகளை நிறைவேற்றுவதற்கும், நகரில் அதிகரித்து வரும் யூத-எதிர்ப்பு அலைக்குத் தீர்வு காண்பதற்கும் பதிலாக இஸ்ரேலைத் தாக்குகிறார் என்று பதிவிட்டார்.

திட்டமிட்டபடி நெதன்யாகு நியூயோர்க் நகரத்திற்கு வருவார் என்றும், நெதன்யாகு அல்ல, மம்தானிதான் கைது செய்யப்பட வேண்டும் என்றும் அந்த இஸ்ரேலியத் தூதர் தெரிவித்துள்ளார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
கொடிய சட்டமான PTA கொண்டுவரப்பட்டு இன்றுடன் 47 ஆண்டுகள்…
2 நாட்கள் முன்