சர்வதேச நீதிமன்றத்தையே எச்சரித்த இஸ்ரேல் பிரதமர்!

Benjamin Netanyahu Israel World Israel-Hamas War
By Raghav Nov 22, 2024 09:53 AM GMT
Report

தனக்கு பிடியாணை பிறப்பித்த சர்வதேச நீதிமன்றம் கடும் எதிர்வினைகளைச் சந்திக்க நேரிடும் என்று இஸ்ரேல் (Israel) பிரதமர் நெதன்யாகு (Benjamin Netanyahu) வெளிப்படையாகவே எச்சரித்துள்ளார்.

காசா போரில் போர்க் குற்றம் மற்றும் மனிதக் குலத்திற்கே எதிரான குற்றங்களைப் புரிந்துள்ளதாக இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவுக்கு சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் நேற்றையதினம் (21.11.2024) பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்தது.

கடந்தாண்டு இஸ்ரேல் மீது ஹமாஸ் தாக்குதல் நடத்திய நிலையில், அதற்கு பதிலடி கொடுக்கும் வகையயில் காசாவில் உள்ள ஹமாஸ் படையைக் குறிவைத்து தீவிர தாக்குதல்கள் நடத்தியது.

இஸ்ரேல் பிரதமருக்கு பிடியாணை பிறப்பித்த சர்வதேச குற்றவியல் நீதிமன்றம்

இஸ்ரேல் பிரதமருக்கு பிடியாணை பிறப்பித்த சர்வதேச குற்றவியல் நீதிமன்றம்

பிடியாணை

இதனால் காசாவில் உள்ள அப்பாவி பொதுமக்களும் மிகக் கடுமையாகப் பாதிக்கப்பட்டதுடன், உயிர் சேதங்களும் அதிகமாக இடம்பெற்றது.

சர்வதேச நீதிமன்றத்தையே எச்சரித்த இஸ்ரேல் பிரதமர்! | Israeli Prime Minister Netanyahu Warns The Icc

இதற்கிடையே காசா மோதலில் போர் குற்றங்கள் நடந்துள்ளதாகச் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அந்த வழக்கில் நெதன்யாகுவுக்கு பிடியாணை பிறப்பித்து சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டது.

இது சர்வதேச அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.  

தீவிரமடையும் ரஷ்ய - உக்ரைன் போர்: முதல் முறையாக ஐசிபிஎம் ஏவுகணை தாக்குதல்

தீவிரமடையும் ரஷ்ய - உக்ரைன் போர்: முதல் முறையாக ஐசிபிஎம் ஏவுகணை தாக்குதல்

சர்வதேச நீதிமன்றம்

இதற்கிடையே இது தொடர்பாக நெதன்யாகு சில பரபர கருத்துகளைத் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் தெரிவித்துள்ளதாவது

சர்வதேச நீதிமன்றத்தையே எச்சரித்த இஸ்ரேல் பிரதமர்! | Israeli Prime Minister Netanyahu Warns The Icc

"இப்போது சர்வதேச நீதிமன்றம் நடத்திய விசாரணையும் ஒரு பிரான்ஸ் நாட்டை சேர்ந்த நீதிபதியின் தலைமையில் நடந்து இருக்கிறது.

என் மீதும், இஸ்ரேல் நாட்டின் மீதும் வேண்டுமென்றே பொய்யாகக் குற்றம் சாட்டுகிறது. அப்பாவி மக்கள் உயிரிழக்கக்கூடாது என்பதில் நாங்கள் உறுதியாகவே இருந்துள்ளோம்.

காசாவில் ஹமாஸ் பதுங்கி இருந்த இடங்களைக் குறிவைத்து மட்டுமே இஸ்ரேல் தாக்குதல் நடத்துகிறது. அப்போதும் அங்கு அப்பாவி மக்கள் இருந்தால் அவர்களை வெளியேற்ற தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம். 

வெளிநாடொன்றில் உள்ள தொழிலாளர்களுக்கு வெளியான முக்கிய தகவல்

வெளிநாடொன்றில் உள்ள தொழிலாளர்களுக்கு வெளியான முக்கிய தகவல்

இஸ்ரேல் - காசா

அதேநேரம் ஹமாஸ் அமைப்பினர் தான் அப்பாவி மக்களைச் சுட்டுக் கொல்கிறார்கள். மனித கேடயங்களாகப் அவர்களை பயன்படுத்துகிறார்கள்.

சர்வதேச நீதிமன்றத்தையே எச்சரித்த இஸ்ரேல் பிரதமர்! | Israeli Prime Minister Netanyahu Warns The Icc

காசா மக்களுக்கு தேவையான உதவிகளை நாங்கள் தான் செய்கிறோம். 700,000 டன் உணவுகளை காசா மக்களுக்கு இஸ்ரேல் சார்பில் வழங்கப்பட்டுள்ளது.

ஆனால், ஹமாஸ் அமைப்பினர் அந்த உணவு பொருட்களை கொள்ளையடிக்கிறார்கள். அப்படியிருக்கும் போது இஸ்ரேல் தான் காசா மக்களை பட்டினி போடுவதாக சொல்வதை ஏற்க முடியாது.

அங்குள்ள மக்கள் மோசமான நோய்களால் பாதிக்கப்படக்கூடாது என்பதற்காகத் தடுப்பூசி போடும் நடவடிக்கைகளையும் எடுத்துள்ளோம்.

கண்மூடித்தனமான துப்பாக்கிச்சூடு - 38பேர் பலி

கண்மூடித்தனமான துப்பாக்கிச்சூடு - 38பேர் பலி

கடுமையான விளைவு

கடந்த சில வாரங்களில் மட்டும் காசாவில் உள்ள 97 சதவீத மக்களுக்கு போலியோவுக்கு தடுப்பூசி போட்டுள்ளோம். அப்படியிருக்கும் போது எப்படி எங்கள் மீது இனப்படுகொலை குற்றச்சாட்டு வருகிறது என்று புரியவே இல்லை.

ஹமாஸுக்கு எதிரான இந்த போரைக் கூட நாங்கள் ஆரம்பிக்கவில்லை. கடந்தாண்டு அக். 7ம் தேதி அவர்கள் தான் முதலில் தாக்கினார்கள்.

சர்வதேச நீதிமன்றத்தையே எச்சரித்த இஸ்ரேல் பிரதமர்! | Israeli Prime Minister Netanyahu Warns The Icc

நாங்கள் பதிலடி மட்டுமே கொடுத்தோம். ஈரான், சிரியா மற்றும் ஏமனில் நடந்த உண்மையான போர்க் குற்றங்கள் தொடர்பாகச் சர்வதேச நீதிமன்றம் அமைதி காப்பது ஏன்? நான் ஒன்றை மட்டும் சொல்லிக் கொள்ள விரும்புகிறேன்.

சர்வதேச நீதிமன்றமும் சரி, அதன் முடிவை ஆதரிப்பவர்கள் "கடுமையான விளைவுகளை" எதிர்கொள்ள வேண்டியிருக்கும். ஒன்றைப் புரிந்து கொள்ளுங்கள்.

உங்கள் எதிரிகள் தான் எங்கள் எதிரிகள். எனவே, எங்கள் வெற்றி என்பது உலகிற்கே கிடைத்த வெற்றியாகவே இருக்கும்" என குறிப்பிட்டுள்ளார்.

ரஷ்யாவுக்குள் புகுந்த பிரித்தானிய ஏவுகணை: அடுத்த கட்டத்திற்கு நகரும் உக்ரைன்

ரஷ்யாவுக்குள் புகுந்த பிரித்தானிய ஏவுகணை: அடுத்த கட்டத்திற்கு நகரும் உக்ரைன்

1000 நாட்களை கடந்த உக்ரைன் - ரஷ்ய போர் பதற்றம்: பைடன் வழங்கிய அதிரடி ஒப்புதல்!

1000 நாட்களை கடந்த உக்ரைன் - ரஷ்ய போர் பதற்றம்: பைடன் வழங்கிய அதிரடி ஒப்புதல்!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!


 


ReeCha
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, வவுனிக்குளம், பருத்தித்துறை

26 Oct, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கொழும்பு, London, United Kingdom

27 Oct, 2024
14ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொழும்பு, கனடா, Canada

27 Oct, 2011
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, London, United Kingdom

06 Oct, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை, சிட்னி, Australia

28 Oct, 2015
13ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, வல்வெட்டித்துறை, Shrewsbury, United Kingdom

28 Oct, 2012
6ம் ஆண்டு நினைவஞ்சலி

Edmonton, United Kingdom, England, United Kingdom

27 Oct, 2019
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, Harrow, United Kingdom

27 Oct, 2022
6ம் ஆண்டு நினைவஞ்சலி

குடத்தனை, முகமாலை, பரந்தன்

28 Oct, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, கரம்பொன், Hamburg, Germany, Newbury Park, United Kingdom

27 Oct, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, யாழ்ப்பாணம், Morden, United Kingdom

27 Oct, 2024
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், வெள்ளவத்தை

24 Oct, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, சுன்னாகம், London, United Kingdom

27 Oct, 2015
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Den Helder, Netherlands

21 Oct, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய், கொழும்பு, Birmingham, United Kingdom

26 Oct, 2023
மரண அறிவித்தல்

அச்சுவேலி, வெள்ளவத்தை, Pinner, United Kingdom

24 Oct, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் களபூமி, London, United Kingdom, கொழும்பு

26 Oct, 2019
6ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Gossau, Switzerland

25 Oct, 2019
6ம் ஆண்டு நினைவஞ்சலி

பூந்தோட்டம், மகாறம்பைக்குளம்

31 Oct, 2019
11ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland

26 Oct, 2018
மரண அறிவித்தல்

மூளாய், London, United Kingdom

17 Oct, 2025
20ம் ஆண்டு நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் வேதரடைப்பு, காரைநகர் மருதடி

24 Oct, 2019
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Le Blanc-Mesnil, France

18 Oct, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024