ஊடகங்களுக்கு எதிராக செயல்படுவது முறையற்றது! வஜிர சுட்டிக்காட்டு
ஊடகங்களுக்கு எதிராக செயற்படுவது முறையான ஒன்று அல்ல என ஐக்கிய தேசிய கட்சியின் தவிசாளர் வஜிர அபேவர்த்தன தெரிவித்துள்ளார்.
அவ்வாறான செயற்பாடுகளுக்கு ஐக்கிய தேசிய கட்சி என்றவகையில் எமது முழுமையான எதிர்ப்பை தெரிவிக்கின்றோமென வஜிர அபேவர்த்தன மேலும் தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நடத்திய செய்தியாளர் சந்திப்பில் கருத்து தெரிவித்த அவர்,
பல்வேறு பிரசாரங்கள்
“ஊடகங்களை எவ்வாறு கட்டுப்படுத்துவது என ஊடகங்கள் ஊடாவே பல்வேறு பிரசாரங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதியாவதற்கு முன்னர் எதிர்க்கட்சியில் இருக்கும் காலத்தில் இந்த நாட்டில் ஊடகங்களுக்கு தேவையான சுதந்திரத்தை பெற்றுக்கொடுப்பதற்கு தேவையான சட்ட திட்டங்களை அனுமதித்துக்கொள்ள ஒத்துழைப்பு வழங்கி இருந்தார்.
அதேபோன்று தகவல் அறியும் சட்டத்தையும் அமைத்தார். அந்த சட்டம் மூலம் ஊடக நிறுவனங்கள், ஊடகவியலாளர்கள் பாதுகாக்கப்படுகின்றனர்.
ஏனெனில் பொது மக்களுக்கு தகவல் அறியும் உரிமை இருக்கும் என்றால், தகவல்களை அறிந்துகொள்வதற்காக இலங்கை மக்களை அறிவுறுத்துவது ஊடகங்களின் கடமையாகும்.
மனிதர்கள் பிறப்பில் தவறு செய்வதில்லை. அதனால் தவறுகளை சுட்டிக்காட்டி அதனை சரிசெய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். அவ்வாறு இல்லாமல் ஊடகங்களை பயமுறுத்துவதோ அல்லது அவற்றுக்கு எதிராக செயற்படுவதோ முறையல்ல” என கூறியுள்ளார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |