சஜித் அணி ஆதரவு : மட்டக்களப்பு மாநகரசபையில் ஆட்சி அமைக்கிறது தமிழரசு
இலங்கை தமிழ் அரசு கட்சி வேட்பாளர் சிவம் பாக்கியநாதன் மட்டக்களப்பு மாநகர சபை மேயராக தெரிவு செய்யப்பட்டுள்ளார் என மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் இராசமாணிக்கம் இன்று(11) தெரிவித்தார்.
சிவம் பாக்கியநாதன் ஐக்கிய மக்கள் சக்தி (SJB) உறுப்பினர்களின் ஆதரவுடன் தேர்ந்தெடுக்கப்பட்டதாக நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் தனது எக்ஸ் பதவில் பதிவிட்டுள்ளார்.
பிள்ளையானுடன் கூட்டுச் சேர முயன்ற அரசாங்கம்
"ஒரு ஆச்சரியமான திருப்பமாக, தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் தங்கள் வேட்பாளருக்கு ஆதரவைத் திரட்ட பல்வேறு வழக்கத்திற்கு மாறான தந்திரோபாயங்களைப் பயன்படுத்தியதாகக் கூறப்படுகிறது, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பிள்ளையானின் தமிழ் மக்கள் விடுதலை புலிகள் (TMVP) உடன் கூட்டணி அமைக்கும் அளவிற்குச் சென்றது," என்று அவர்தெரிவித்துள்ளார்.
கடுமையான கவலைகளை எழுப்பியுள்ளது
பல கடுமையான குற்றச்சாட்டுகளுக்காக பிள்ளையான் என்ற சிவநேசதுரை சந்திரகாந்தன் காவலில் இருப்பதால், அதிகாரத்தைத் தேடி அத்தகைய நபருடன் கூட்டணி வைக்க அரசாங்கம் தயாராக இருப்பது கடுமையான கவலைகளை எழுப்பியுள்ளது என்று சாணக்கியன் மேலும் குறிப்பிட்டார்.
ITAK candidate Sivam Pakkiyanathan has been elected as the Mayor of the Batticaloa Municipal Council with the support of the SJB members. In a surprising turn, the NPP government reportedly employed various unconventional tactics to rally support for their candidate, even going… pic.twitter.com/FmlvARglhj
— Shanakiyan Rajaputhiran Rasamanickam (@ShanakiyanR) June 11, 2025
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
