தமிழ் மக்களை ரகசியமாக குழப்பும் ஆளும் தரப்பு: இடையில் சிக்கிய தமிழரசுக்கட்சி
அண்மைய தமிழர் அரசியல் களத்தில் தமிழரசுக்கட்சி மற்றும் ஈழமக்கள் ஜனநாயக கட்சி (EPDP) என்பன பாரிய பேசுபொருளுக்கு உள்ளாகி உள்ளன.
வடக்கு கிழக்கு பகுதியில் உள்ள உள்ளூராட்சி மன்றங்களில் தமிழரசுக் கட்சி ஆட்சி அமைப்பதற்கு ஈழ மக்கள் ஜனநாயக கட்சி ஆதரவு வழங்க வேண்டும் என ஈழமக்கள் ஜனநாயக கட்சியிடம் தமிழரசுக்கட்சி வேண்டுகோள் விடுத்திருந்தது.
இந்தநிலையில், குறித்த விவகாரம் தீயாய் பரவி தமிழ் மக்களிடையே தமிழரசுக்கட்சி மீதான பாரிய அதிருப்தியை ஏற்படுத்தி கடும் விமர்சனத்திற்கு உள்ளாகி இருந்தது.
ஒருவேளை ஆளும் தரப்பின் உந்துதலில் தமிழசுகட்சி இவ்வாறு செயற்படுகின்றதா எனவும் மக்களிடையே தமிழரசுக் கட்சி மீதான அதிருப்தியை ஏற்படுத்துவற்காக இவ்வாறு இரகசியமான பின்புலத்திலிருந்து ஆளும் தரப்பு திட்டமிட்டு தமிழரசு கட்சி மீது சேறு பூசுகின்றதா எனவும் கேள்விகள் எழுப்பப்பட்டு வருகின்றது.
இது தொடர்பிலும் , தமிழ் அரசியல் களம், அடுத்த கட்ட நகர்வு மற்றும் உள்ளூராட்சி ஆட்சியமைப்பு குறித்த பலதரப்பட்ட விடயம் தொடர்பில் விரிவாக ஆராய்கின்றது இன்றைய ஐபிசி தமிழின் செய்தி வீச்சு,
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! | 
 
    
                                 
                 
                         
                         
                         
                 
                                             
         
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
        