விசுவாசிகளைத் திரட்டும் தமிழரசுக் கட்சி...! உட்கட்சி பிளவை அம்பலப்படுத்திய ஆய்வாளர்
இலங்கைத் தமிழரசுக் கட்சிக்குள் ஏற்பட்டுள்ள பிளவானது, விசுவாசிகளைத் திரட்டும் நிலைமைக்கு வந்துள்ளது என அரசியல் ஆய்வாளர் நிலாந்தன் சுட்டிக்காட்டியுள்ளார்.
குறித்த விடயத்தை ஐபிசி தமிழின் களம் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் மேலும் தெரிவித்த அவர், “தமிழரசுக் கட்சியின் நிலை, கட்சியைக் கட்டியெழுப்புவதைத் தாண்டி விசுவாசிகளைத் திரட்டும் நிலைக்கு வந்துவிட்டது.
இந்தநிலையில் கட்சியில் உள்ளவர்கள் அவரவர் தத்தமது விசுவாசிகளைத் திரட்ட முற்படுவதால் கட்சி நிலைகுலைந்து போகும்.
இதனடிப்படையில், இந்தக் கட்சிகள் தங்களைக் கட்சிகளாகக் கட்டமைப்பதற்குக்கூட முறையான கட்டமைப்புகளைக் கிராம மட்டத்தில் முன்னெடுக்கவில்லை” என அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், தமிழரசுக் கட்சியின் தற்போதைய நிலைமை, தமிழ் மக்களின் அரசியல் எதிர்காலம், தற்போதைய அரசாங்கத்தில் தமிழ் மக்கள் குறித்த நிலைப்பாடு மற்றும் பலதரப்பட்ட அரசியல் சார் விடயங்கள் தொடர்பில் அவர் தெரிவித்த கருத்துக்களுடன் வருகின்றது ஐபிசி தமிழின் சக்ரவியூகம் நிகழ்ச்சி...!
ஈரானில் உச்சக்கட்ட படபடப்பு...! அணுமின் நிலையங்களைச் சுற்றி மனிதச் சங்கிலி - எட்டு மணி வரை ட்ரம்பின் கெடு
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |