ஆட்சியமைக்க அலையும் தமிழரசுக்கட்சி :அநுர தரப்பிடமும் ஆதரவு கோரியமை அம்பலம்
இலங்கை தமிழரசு கட்சியானது(itak) உள்ளூராட்சி சபையில் ஆட்சி அமைப்பதற்கு தேசிய மக்கள் சக்தியிடம் (npp)ஆதரவு கோரிய விடயம் அம்பலமாகியுள்ளது.
மானிப்பாய் பிரதேச சபையில் ஆட்சியை அமைப்பதற்காக இவ்வாறு ஆதரவு கோரியமை வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
வலி தென்மேற்கு பிரதேச சபையில் ஆட்சியமைப்பு
இலங்கை தமிழரசு கட்சியின் மானிப்பாய் பிரதேச சபையின் உறுப்பினர் ஒருவர், மானிப்பாய் பிரதேச சபையின் NPP உறுப்பினர் ஒருவரிடம் இவ்வாறு ஆதரவு கோரியதாக தெரிவிக்கப்படுகிறது.
இருப்பினும் கட்சியின் உயர்மட்ட குழுவின் தீர்மானத்துக்கு அமையவே ஆதரவு வழங்குவதா இல்லையா என முடிவு எடுக்கப்படும் என தேசிய மக்கள் சக்தியின் மானிப்பாய் பிரதேச சபையின் உறுப்பினர் கூறியதாக அறிய முடிகிறது.
டக்ளஸிடம் சென்ற சிவஞானம்
யாழ். மாவட்டத்தில் உள்ள உள்ளூராட்சி மன்றங்களில் ஆட்சி அமைப்பதற்காக இன்றையதினம் ஈ.பி.டி.பி அலுவலகத்திற்கு நேரடியாகவே சென்ற இலங்கை தமிழரசுக்கட்சியின் பதில் செயலாளர் சி.வி.கே சிவஞானம், அந்தகட்சியின் செயலாளர்நாயகம் டக்ளஸ் தேவானந்தாவிடம் ஆதரவு கோரியமை குறிப்பிடத்தக்கது.
இலங்கை தமிழரசு கட்சியானது பதவிக்காக எந்த அளவுக்கும் செல்வதற்கு தயாராகிய விடயம் தற்போது புலப்படுகிறது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
