அணியில் இருந்து விலக முடிவெடுத்த ஜடேஜா..! - காசி விஸ்வநாதன் விளக்கம்
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நட்சத்திர வீரராக விளங்கும் ஜடேஜா கடந்த ஆண்டு அந்த அணியில் இருந்து விலக முடிவெடுத்தார்.
கடந்த தொடர் ஆரம்பமாவதற்கு முன்பு ஜடேஜா சிஎஸ்கே அணியின் தலைவராக பொறுப்பேற்றார். ஆனால் சிஎஸ்கே அணி தொடர்ந்து தோல்வியை தழுவியதால் ஜடேஜா மீது கடும் விமர்சனம் எழுந்தது.
ஜடேஜாவுக்கு தலைவர் பொறுப்பை எப்படி கையாள்வது என்று ஊட்டி விட முடியாது என தோனி வெளிப்படையாக பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
தலைவர் பொறுப்பு
இதனை அடுத்து மீண்டும் தலைவர் பொறுப்புக்கு தோனி வந்தார். இதனால் தமக்கு காயம் ஏற்பட்டதாக கூறி ஐபிஎல் தொடரிலிருந்து ஜடேஜா விலகினார்.
அதன் பிறகு சிஎஸ்கே அணியிலிருந்து விலகவும் ஜடேஜா முடிவெடுத்தார். சமூக வலைத்தளங்களில் சிஎஸ்கே தொடர்பான பழைய பதிவுகளை எல்லாம் ஜடேஜா அழித்தார். இதனால் அவர் நடப்பாண்டு விளையாட மாட்டார் என எதிர்பார்க்கப்பட்டது.
இந்த நிலையில் அந்த சமயத்தில் என்ன நடந்தது என்பது குறித்து சிஎஸ்கே நிர்வாக தலைமை அதிகாரி காசி விஸ்வநாதன் அளித்துள்ள செவ்வி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
அணியில் பல சிக்கல்கள்
"சிஎஸ்கே இடையே கருத்து வேறுபாடு இருந்தது. இதனால் தோனி ஜடேஜாவிடம் நீண்ட நேரம் பேச்சுவார்த்தை நடத்தினார்.
ஜடேஜாவுக்கு அனைத்தையும் புரிய வைத்தார்.ஜடேஜா அணிக்கு எவ்வளவு முக்கியம் என்பதை புரிய வைத்தார்.
In last season, MS Dhoni and CSK CEO Kasi Viswanathan have made a long-frank chat with Jadeja on captaincy removal.
— CricketGully (@thecricketgully) March 25, 2023
Jadeja was so upset at that time on his own from and Captaincy was a burden for him. (Source:- Cricbuzz) pic.twitter.com/JjdL5NnwAp
அதன் பிறகு சிஎஸ்கே விடமிருந்து ஜடேஜா என்ன எதிர்பார்க்கிறார் என்பதையும் தோனி கேட்டு அறிந்தார். இதன் பிறகு ஜடேஜா நிலைமையை புரிந்து கொண்டு சிஎஸ்கே அணியில் தொடர்வதாக சம்மதித்தார்.
அணியில் பல சிக்கல்கள் இருந்தது. அதை அனைத்தையும் தோனி பூர்த்தி செய்தார்."என காசி விஸ்வநாதன் கூறினார்.
ராயுடுவும் ஓய்வு
இதனால் சிஎஸ்கே அணி இந்த தொடரில் எவ்வித பிரச்சினையும் இல்லாமல் அனைத்து வீரர்களும் சிறப்பாக விளையாடுவார்கள் என ரசிகர்கள் நம்புகின்றனர்.
இதேபோன்று மற்றொரு நட்சத்திர வீரரான அம்பத்தி ராயுடுவும் ஐபிஎல்லில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.
எனினும் அதனை சிஎஸ்கே ஏற்றுக் கொள்ளாததால் தனது ஓய்வு முடிவை திரும்ப பெற்றார். கடந்த ஆண்டு களத்திற்கு வெளியே சிஎஸ்கே அணி இது போன்ற பெரிய பிரச்சனைகளை சந்தித்தது குறிப்பிடத்தக்கது.