“எங்கள் ஒற்றுமையைக் கொண்டாட கைகோர்ப்போம்” சமூக ஒத்திசைவுத் திட்டம்!
“எங்கள் ஒற்றுமையைக் கொண்டாட கைகோர்ப்போம்” என்ற கருப்பொருளில் சிறுவர் பரிமாற்ற வெளிக்கள பயணம் யாழ்பாண மாவட்டத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்வானது கடந்த வருடம் ஆரம்பிக்கப்பட்ட சமூக ஒத்திசைவுத் திட்டத்தின் (ReEnforce Social Cohesion Project-ReSoCo) பிரதான செயற்பாடாக காணப்படுகின்றது.
இத் திட்டமானது BMZ நிதி உதவியின் கீழ் பங்காளர் நிறுவனங்களான வேள்ட்விஷன் மற்றும் லங்கா ஜாதிக சிரமதான சங்கம் (சர்வோதயம்) மூலம் 14 முதல் 17 வயதிற்கு இடைப்பட்ட சிறுவர்கள் மத்தியில் சமூக ஒத்திசைவை மீள் வலியுறுத்துவதை நோக்காக கொண்டு, வடக்கு மற்றும் ஊவா மாகாணங்களில் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றமை குறிபிடத்தக்கது.
இப்பரிமாற்று நிகழ்வு இரு பிராந்திய சிறுவர்கள் மத்தியில் காணப்படும் பல்வேறுபட்ட காலச்சாரங்களை பகிர்ந்து கொள்வதன் மூலம் ஏனைய இனம், மதம், பால் மற்றும் விசேட தேவைக்கு உட்பட்டோர்களின் தனித்துவங்களை மதித்து, பாரபட்சம் அற்ற இளைஞர் சமுதாயத்தை உருவாக்குவதை பிராதான நோக்காகக் கொண்டது.
மேலும் இந்நிகழ்வில் கலந்து கொண்ட சிறுவர்கள் தமது, அறிவு, திறன் மற்றும் அனுபவங்களை தங்களுக்குள்ளும் பெற்றோர்கள் மற்றும் சமூகத்துடனும் பகிர்ந்து கொண்டனர்.
இப் பரிமாற்று வெளிக்கள பயண நிகழ்வில் மேனகா பஸ்நாயக சிறுவர் உரிமைகள் மேம்பாட்டு உத்தியோகத்தர் பிரதேச செயலகம், மீஹாகியுலை பதுளை மாவட்டம் அவர்களும், சர்வோதய பதுளை மாவட்ட இணைப்பாளர் அசோகா குமாரி ஆகியோர் கலந்து கொண்டனர்.
இப்பரிமாற்று நிகழ்வின் இறுதி நாளான 06-11-2022 அன்று கலாச்சார நிகழ்வானது யாழ்பாணத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வானது மேலதிக அரசாங்க அதிபர் எம்.பிரதீபன் மாவட்ட செயலகம் யாழ்பாணம், வேள்ட் விஷன் மானியங்களுக்கான செயற்பாட்டு முகாமையாளர் மார்கஸ் பெரேரா, உதவி பிரதேச செயலாளர் சங்கானை கே.செந்தூரன் ஆகியோரும் மேலும் மாவட்ட சிறுவர் உரிமைகள் மேம்பட்டு உத்தியோகத்தர் கே.மனோகரன், மாவட்ட அரச சார்பற்ற நிறுவனங்களின் இணைப்பதிகாரி ந. தயாபரன் சர்வோதய பதுளை மாவட்ட, யாழ்பாண மாவட்ட இணைப்பாளர்களும், வேள்ட்விஷன் உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.