யாழில் இரத்த வாந்தி எடுத்த குடும்பஸ்தருக்கு நேர்ந்த கதி
யாழில் (Jaffna) இரத்த வாந்தி எடுத்த குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
குறித்த சம்பவம் இன்று (23) இடம்பெற்றுள்ளது.
சம்பவத்தில் காரைநகர் - பண்டித்தாழ்வு பகுதியைச் சேர்ந்த கோணலிங்கம் சுந்தரலிங்கம் (வயது 47) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
உடற்கூற்று பரிசோதனை
இது தொடர்பில் மேலும் தெரியவருகையில், இன்று (23) காலை மூன்று தொடக்கம் நான்கு தடவைகள் மூக்காலும் மற்றும் வாயாலும் இரத்தம் வெளிவந்துள்ளது.
இதையடுத்து, வலந்தலை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கிருந்து யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
மரண விசாரணை
இருப்பினும் சிகிச்சை பலனின்றி இன்று காலை பத்து மணியளவில் அவர் உயிரிழந்துள்ளார்.
இதன்பின்பு, அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டுள்ளார்.
இந்தநிலையில், உடற்கூற்று பரிசோதனைகளுக்காக சடலம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |


செஞ்சோலை… ஈழக் குழந்தைகளுக்காய் தலைவர் கட்டிய கூடு 12 மணி நேரம் முன்
