மக்கள் காணியில் யாழ்.ஜனாதிபதி மாளிகை: உறுதிப்படுத்தப்பட்டது தகவல்!
யாழ்ப்பாண ஜனாதிபதி மாளிகை யாழ்.மக்களின் நிலங்களை சட்டவிரோதமாக கையகப்படுத்தி கட்டப்பட்டமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
நகர அபிவிருத்தி, கட்டுமானம் மற்றும் வீடமைப்பு அமைச்சினால் நடத்தப்பட்ட விசாரணையில் இந்த விடயம் தெரியவந்துள்ளது.
இந்த நிலையில், ஜனாதிபதி மாளிகை நிலங்களை உரிமை கோரி எட்டு உரிமையாளர்கள் முன்வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
நிலத்தில் உள்ள பிரச்சினைகள்
இவ்வாறானதொரு பின்னணியில், ஜனாதிபதி மாளிகையை முதலீட்டாளரிடம் ஒப்படைப்பதில் சிக்கல் நிறைந்த சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இதன்படி, முதலீட்டாளரிடம் ஜனாதிபதி மாளிகையை ஒப்படைப்பதற்கு முன்பு, நிலத்தில் உள்ள அனைத்து பிரச்சினைகளையும் தீர்க்க வேண்டும் என நகர அபிவிருத்தி, கட்டுமானம் மற்றும் வீடமைப்பு அமைச்சு அனுர கருணாதிலக தெரிவித்துள்ளார்.
கனேடிய முதலீட்டாளர்கள்
கனேடிய முதலீட்டாளர் உட்பட முதலீட்டாளர்கள் குழு, பல்வேறு முதலீடுகளுக்காக முன்வந்துள்ள நிலையில், நிலத்தில் உள்ள பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கான பணிகள் தற்போது நடைபெற்று வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
2010 மற்றும் 2015 க்கு இடையில் கட்டப்பட்ட யாழ்ப்பாண ஜனாதிபதி மாளிகை, காங்கேசன்துறை பகுதியில் சுமார் முப்பது ஏக்கர் நிலப்பரப்பில் அமைந்துள்ளது. அந்த நிலத்தில் பதினைந்து ஏக்கரில் கட்டிடங்கள் கட்டப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
