யாழ் பாதுகாப்பு படை தலைமையகம் அகற்றல் : அரசின் அறிவிப்பு வெளியானது
யாழ்ப்பாணத்தில் உள்ள பாதுகாப்புப் படைத் தலைமையகத்தை அகற்ற அரசாங்கம் முடிவு செய்துள்ளதாக ஊடகங்களில் வெளியான செய்திகள் தவறானைவை என்றும் அத்தகைய முடிவு எதுவும் எடுக்கப்படவில்லை எனவும் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.
இது தொடர்பாக இன்று (03) நடைபெற்ற அமைச்சரவை முடிவுகள் குறித்த ஊடகவியலாளர் சந்திப்பில் கேள்விகள் எழுப்பப்பட்டன.இதன்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இது தொடர்பான உண்மைகளை பாதுகாப்பு அமைச்சகமும் பாதுகாப்புச் செயலாளரும் தெளிவுபடுத்தியுள்ளதாகக் கூறிய அமைச்சர், சமூக ஊடகங்களில் இதுபோன்ற செய்திகளை வெளியிட்ட அனைத்து தரப்பினருக்கும் எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று பாதுகாப்பு அமைச்சகம் இப்போது தெரிவித்துள்ளதாகக் கூறினார்.
அமைச்சர் நளிந்த ஜெயதிஸ்ஸ மேலும் கருத்து தெரிவிக்கையில்,
செய்தி முற்றிலும் தவறானது
யாழ்ப்பாண பாதுகாப்புப் படைத் தலைமையகம் அகற்றப்பட உள்ளதாக வெளியான செய்தி முற்றிலும் தவறானது. இதற்கு எந்த அடிப்படையும் இல்லை. பாதுகாப்பு அமைச்சகம் அப்படி எந்த முடிவையும் எடுக்கவில்லை.

இதுபோன்ற தகவல்களைப் பரப்புவதன் மூலம் பொதுமக்களிடையே தேவையற்ற குழப்பம் மற்றும் அச்சுறுத்தல் ஏற்படுவது குறித்து அமைச்சகம் கவனத்தை ஈர்த்துள்ளது,
பாதுகாப்பு அமைச்சகம் கடுமையான சட்ட நடவடிக்கை
மேலும் இதுபோன்ற தவறான தகவல்களைப் பரப்புபவர்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

எனவே, அந்த நபர் யாராக இருந்தாலும், அந்தத் தகவல்களுக்குப் பொறுப்பேற்று, அந்தச் சட்ட நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பது நல்லது. ஏனெனில் இதுபோன்ற செய்திகள் மூலம் பொதுமக்களிடையே உருவாக்கப்படும் குழப்பம் மிகவும் பொருத்தமானதல்ல."
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
குருதியில் நனைந்த தம்பலகாமம்…! 7 மணி நேரம் முன்