யாழில் மாணவனின் ஆடைகளை களைந்து காணொளி பதிவு செய்து தாக்குதல்
தனிப்பட்ட பகை காரணமாக யாழில், 17 வயது மாணவன் ஒருவனின் ஆடைகளை களைந்து, அவன்மீது தாக்குதல் நடாத்தி, அதனை காணொளியாக பதிவு செய்து வேறு நபர்களுக்கு அனுப்பிய சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இதேவேளை சம்பவத்துடன் தொடர்புடைய மற்றைய நபர் தலைமறைவாகியுள்ளார். சுன்னாகம் காவல்துறை பிரிவிற்குட்பட்ட மருதனார்மடம் பகுதியில், கடந்த வெள்ளிக்கிழமை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
மாணவனின் ஆடைகளை களைந்து தாக்குதல்
மாணவனின் வீட்டிற்கு சென்ற இருவர் அவரை மோட்டார் சைக்கிளில் வயல்வெளிக்கு கடத்திச் சென்று ஆடைகளை களைந்து காணொளி எடுத்து அதனை சக மாணவர்களுக்கு நேரலையில் காண்பித்துள்ளனர்.

பின்னர் சம்பவம் தொடர்பாக சுன்னாகம் காவல் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.இதனையடுத்து காவல்துறையினர் மேற்கொண்ட நடவடிக்கையில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.மற்றைய நபர் தலைமறைவாகியுள்ளார்.
கைதானவருக்கு நீதிமன்றின் உத்தரவு
இந்நிலையில் கைது செய்யப்பட்டவரை நீதிமன்றத்தில் முற்படுத்தியவேளை, அவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டதாக சுன்னாகம் காவல்துறை தெரிவித்துள்ளது.

இதேவேளை மற்றைய சந்தேகநபரை கைது செய்யும் வகையில் சுன்னாகம் காவல்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |