வெளிநாடு செல்பவர்களுக்கான பி.சி.ஆர் பரிசோதனை தொடர்பில் யாழ் போதனா வைத்தியசாலை தகவல்!
people
PCR
jaffna teaching hospital
By Thavathevan
வெளிநாடு செல்பவர்களுக்கான பி.சி.ஆர் பரிசோதனை யாழ் போதனா வைத்தியசாலையில் நாளை(14) முதல் மேற்கொள்ளப்படமாட்டாது என வைத்தியசாலை பணிப்பாளர் நந்தகுமாரன் தெரிவித்துள்ளார்.
இன்றைய தினம் அவர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
யாழ் போதனா வைத்தியசாலையில் மேற்கொள்ளப்படும் வெளிநாடு செல்பவர்களுக்கான பி.சி.ஆர் பரிசோதனையின் மாதிரி சேகரிப்புப் பணியிலிருந்து வைத்தியர்கள் விலகுவதால் வெளிநாடு செல்பவர்களுக்கான பி.சி.ஆர் பரிசோதனை நிறுத்தப்படுகிறது.
அதேவேளை நோயாளிகளுக்கான பி.சி.ஆர் பரிசோதனைகள் தொடர்ந்தும் மேற்கொள்ளப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.