யாழ்.பல்கலை முன்றலில் மௌன தொழிற்சங்கப் போராட்டம்!
யாழ்ப்பாண பல்கலைக்கழக ஊழியர் சங்கத்தின் ஏற்பாட்டில் பல்கலைக்கழக முன்றலில் அடையாள மௌன தொழிற்சங்கப் போராட்டமொன்று இன்று இடம்பெற்றது.
இந்த போராட்டம் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக முன்றலில் இன்று நண்பகல் 12 மணியளவில் இடம்பெற்றது.
இது தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
அனைத்துப் பல்கலைக்கழக தொழிற்சங்க கூட்டுக்குழுவின் தீர்மானத்துக்கமைய நீண்டகாலமாக நிலவிவரும் பல்கலைக்கழக கல்விசாரா பணியாளர்களின் சம்பள முரண்பாடு மற்றும் ஏனைய பிரச்சினைகள் தொடர்பாக பல்கலைக்கழக மானிய ஆணைக்குழுவின் தலைவருக்கு வழங்கப்பட்ட கடிதத்தின் பிரகாரம் அடையாள மௌன தொழிற்சங்கப் போராட்டம் இலங்கையின் சகல பல்கலைக்கழகங்களிலும் மேற்கொள்ளப்படுகின்றது.
கல்விசாரா ஊழியர்களின் பிரச்சினைக்கு உடனடியாக தீர்வினை வழங்கு, சம்பள முரண்பாட்டைத் தீர்க்கும் குழுவின் அறிக்கையை உடனடியாக நடைமுறைப்படுத்து போன்ற பல்வேறு வாசகங்கள் எழுதிய பதாகைகளையும் ஊழியர்கள் தங்கியவாறு போராட்டம் மேற்கொண்டனர்.