பதவி மோகத்தால் கைவிடப்படும் தமிழ்த்தேசியம்...! யாழ் பல்கலைக்குள் அரங்கேறும் அவலம்
தமிழ் தேசிய அரசியலை அறிவியல் ரீதியாக அடுத்தகட்டத்திற்கு எடுத்துச் செல்வதில் யாழ் பல்கலைக்கழகம் தற்போது பின்தங்கி இருப்பதாக அரசறிவியல் ஆசான் திருநாவுக்கரசு சுட்டிக்காட்டியுள்ளார்.
குறித்த விடயத்தை லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் மேலும் தெரிவித்த அவர், கடந்த காலங்களில் யாழ் பல்கலைக்கழகமானது சமூக உணர்வோடும் தமிழ் தேசிய அரசியலுடனான அறிவியல் உணர்வோடும் செயற்பட்டதைச் சுட்டிக்காட்டினார்.
இருப்பினும், தற்போது கடமையைத் தாண்டிப் பதவியை முன்னிறுத்தி யாழ் பல்கலைக்கழகம் நகர்வதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், தமிழ் தேசிய அரசியல், தற்போதைய அரசியல் களம், தற்போதைய அரசாங்கத்தின் அடுத்த கட்ட அரசியல் நகர்வு மற்றும் சர்வதேச அரசியல் என அவர் தெரிவித்த விரிவான கருத்துக்களுடன் வருகின்றது லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சி....
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |