யாழ். நல்லூரிற்கு விஜயம் செய்த அமெரிக்கத் தூதர் ஜீலி சுங்
யாழ்ப்பாணத்துக்கு நேற்றைய தினம் விஜயம் செய்த சிறிலங்காவிற்கான அமெரிக்க தூதர் ஜூலி சுங் இன்று காலை நல்லூருக்கு விஜயம் செய்துள்ளார்.
அந்த வகையில் இன்றைய தினம் யாழ் மறைமாவட்ட ஆயர் ஜஸ்டீன் பெர்னாட் ஞானப்பிரகாஷம் ஆண்டகையை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.
காலை 8.30 மணியளவில் யாழ் மறைமாவட்ட ஆயர் இல்லத்தில் யாழ் மறைமாவட்ட ஆயர் ஜஸ்டீன் பெர்னாட் ஞானப்பிரகாஷம் ஆண்டகையை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.
குறித்த சந்திப்பில் யாழ்ப்பாணத்திலுள்ள தற்போதைய நிலைமைகள் மற்றும் சமகாலப் போக்குகள் குறித்தும் கலந்துரையாடப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
அத்தோடு அரசியல் கட்சிகளின் தலைவர்கள், சிவில் அமைப்புக்களின் தலைவர்கள், வர்த்தக பிரதிநிதிகள் உள்ளிட்ட பல்வேறு பட்ட பல்வேறு தரப்புகளையும் அமெரிக்கத் தூதுவர் சந்தித்து கலந்துரையாடவுள்ளார். என்பதும் குறிப்பிடத்தக்கது.
இது பற்றிய காணொளி தொகுப்பு,