அந்த இடம் ஒரு நரகம்..! மரண தண்டனையே தாருங்கள் - கதறும் சுரேஷ் சலே
உண்ணாவிரதப் போராட்டத்தைக் கைவிடப் போவதில்லை என அரச புலனாய்வு சேவையின் முன்னாள் இயக்குனர் சுரேஷ் சலே வலியுறுத்தியுள்ளார்.
குற்றப் புலனாய்வு தடுப்புக் காவலுக்கு மீண்டும் திரும்ப விரும்பவில்லை என்றும், மரண தண்டனையே மிகவும் பொருத்தமானது என்றும் சுரேஷ் சலே கூறியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவரும் சுரேஷ் சலே, அவரது தனிப்பட்ட வழக்கறிஞர் சந்திக்கச் சென்றபோது மேற்கண்டவாறு கூறியதாக தெரிவிக்கப்படுகிறது.
தேரர் விடுத்த கோரிக்கை
மனித உரிமைகள் ஆணைக்குழு நடத்தி வரும் விசாரணைகள், பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தை ரத்து செய்வது குறித்த அரசின் நிலைப்பாடு மற்றும் அஸ்கிரிய மகாநாயக்க தேரர் விடுத்த கோரிக்கை ஆகியவற்றை வழக்கறிஞர் சுரேஷ் சலேவிடம் தெரிவித்துள்ளார்.

அதன்படி, தற்போதைய உண்ணாவிரதத்தை முடித்துக் கொள்ளுமாறு சுரேஷ் சலேவிடம் வழக்கறிஞர் கேட்டுக்கொண்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறிப்பிட்ட அந்த தடுப்பு கூடத்திற்குத் திரும்ப விரும்பவில்லை என்றும், அந்த இடம் ஒரு நரகம் என்றும் கூறியுள்ள சுரேஷ் சலே, குற்றப் புலனாய்வுத் இயக்குனருக்குத் தன் மீது தனிப்பட்ட விரோதம் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையில், அண்மையில் சுரேஷ் சலே பகிரங்கமாக விசாரிக்கப்பட்டதாகக் கூறப்படும் நாள் தொடர்பான காணொளிக் காட்சிகள் எதுவும் இல்லை என, குற்றவியல் புலனாய்வுத் துறை, இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவிற்குத் தெரிவித்துள்ளது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |