ராஜபக்சக்கள் முதுகுகளில் பறோ மீற்றர்! 11 அம்ச பட்டியலுடன் கதறும் கோட்டாபாய!!
இலங்கையை ஒரு காலத்தில் ஆட்டிவைத்த ராஜபக்ச குடும்ப உறுப்பினர்கள் மீதான அழுத்தம் முன்னெப்போதும் இல்லாத உச்சத்தில் உள்ள நிலையில் பகிரங்கம் தான் கைதுசெய்வதை தடுக்குமாறு முன்னாள் ஜனாதிபதி கோட்டாபாய ராஜபக்ச நேற்று அவசரமாக தாக்கல் செய்த மனு இன்று பிற்பகலில் விசாரணைக்குவருவதில் இழுத்தடிப்புகள் வந்ததால் அந்த மனுமீதான விசாரணைகள் நாளைக்கு ஒத்திவைக்கப்பட்டன.
ஆனால் அவரது பெறா மகனும் சகோதரயோ மகிந்த ராஜபக்சவின் இரண்டாவது மகனான யோஷித ராஜபக்ச, இன்று சிறிலங்கா கடற்படையில் தகுதிகள் இல்லாமல் ஒரு அதிகாரியாக இணைந்த குற்றச்சாட்டுகளில் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஈஸ்டர் சதியில் கோட்டாபாய கைது செய்யப்பட மாட்டார் என்ற உறுதிமொழியை தற்போது யாராலும் வழங்க முடியாத நிலை இருக்கும் பின்னணியில் ராஜபக்ச குடும்பத்தை மையப்படுத்திய பிடியாணைகளும் வெளிநாட்டுப் பயணத் தடைகளும் வந்துள்ள நிலையில் தன்னை எதற்காக கைது செய்யக்கூடாது என்பதற்கு 11 காரணங்களுடன் ஒரு அவர் ஒரு றிட்மனுவை தாக்கல் செய்த நிலையில் இந்த விடயங்களை மையப்படுத்திவருகிறது செய்திவீச்சு,
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |