மரத்துடன் மோதி கோர விபத்து: யாழ். இளைஞன் பலி
Sri Lanka Police
Kilinochchi
Sri Lanka Police Investigation
Accident
Death
By Thulsi
கிளிநொச்சி பகுதியில் இடம்பெற்ற விபத்தில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த இளைஞன் உயிரிழந்துள்ளார்.
இந்த துயர சம்பவம் கிளிநொச்சி காவல்துறை பிரிவுக்குட்பட்ட உமையாள்புரம் பகுதியில் இடம்பெற்றுள்ளது.
யாழ்ப்பாணம் அளவெட்டி பகுதியைச் சேர்ந்த ஆனந்தராஜ் நிதர்சன் (வயது 35) என்பவரே உயிரிழந்துள்ளார்.
மரத்துடன் மோதி விபத்து
தனது பணியினை முடித்துக்கொண்டு யாழ்ப்பாணம் - அளவெட்டி பகுதியை நோக்கி பயணித்துக் கொண்டிருந்த குறித்த இளைஞன் வேகக் கட்டுப்பாட்டை இழந்த நிலையில் வீதியருகில் இருந்த மரத்துடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளார்.

உயிரிழந்தவரின் சடலம் கிளிநொச்சி வைத்தியசாலையில் பிரேத பரிசோதனைக்காக ஒப்படைக்கப்பட்டுள்ளது.
குறித்த சம்பவம் தொடர்பாக கிளிநொச்சி காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்