உவர் நிலங்களாக மாறும் அபாயத்தில் யாழ் வயல்கள் - மக்கள் குற்றச்சாட்டு

Jaffna Sri Lanka Northern Province of Sri Lanka
By Dharu Nov 21, 2022 07:35 AM GMT
Report

வடக்கில் முன்னெடுக்கப்படும் வீட்டுத்திட்டதால் வயல் நிலங்கள் உவர் நிலங்களாக மாறும் அபாயம் நிலவுவதாகப் பொது மக்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.

யாழ்ப்பாணம் வேலணை பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட அல்லைப்பிட்டிப் பகுதியில் அமைக்கப்பட உள்ள தனியார் வீடமைப்புத் தொகுதியால் அருகிலுள்ள வயல் நிலங்கள் உவர் நிலங்களாக மாறும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

மேலும் இப்பகுதியில் சுமார் 70 குடியிருப்புகள் அமைக்கப்படவுள்ளதாக அப்பிரதேச மக்களால் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் அப்பகுதி மக்கள் கருத்துத் தெரிவிக்கையில்,

மண் அகழ்வு

உவர் நிலங்களாக மாறும் அபாயத்தில் யாழ் வயல்கள் - மக்கள் குற்றச்சாட்டு | Jaffna Velanai Water Issues Come Future Project

“சுமார் 4 ஏக்கர் நிலப்பரப்பில் அமைக்கப்பட உள்ள குறித்த வீட்டு தொகுதிக்கான வீதியானது உவர் நீர் தடுப்பணைக்கு அருகாமையில் செல்கின்ற நிலையில் தடுப்பணைக்கு அருகாமையில் சுமார் 2 அடி ஆழத்தில் மண் தோண்டப்பட்டு வீதியின் அருகே அமைக்கப்படுகிறது.

பாரிய நிதிச் செலவில் அமைக்கப்பட உள்ள குடியிருப்பு திட்டத்திற்கு செல்லும் வீதிக்கு அருகில் உள்ள தடுப்பணையின் கீழ் பகுதியில் இருந்து பெறப்படும் மண்ணே தடுப்பணைக்கு பயன்படுகின்றது.

இவ்வாறு தடுப்பணையின் அருகில் மண் அகழ்வு இடம்பெறுவதால் கடல் நீர் உள்வரும் அபாயம் ஏற்பட்டுள்ள நிலையில் எதிர் காலத்தில் வயல்நிலங்களும் உவர்நீர் ஆகிவிடும்.

குறித்த பகுதியில் நெற்பயிர் செய்கையை வாழ்வாதாரமாகக் கொண்டு வாழ்ந்து வரும் குடும்பங்கள் முழுமையாகப் பாதிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

பனை மரங்கள் எரியூட்டல்

உவர் நிலங்களாக மாறும் அபாயத்தில் யாழ் வயல்கள் - மக்கள் குற்றச்சாட்டு | Jaffna Velanai Water Issues Come Future Project

அதுமட்டுமல்லாது குறித்த புதிய குடியிருப்பு தொகுதியில் நான்குக்கு மேற்பட்ட ஆழ்துளைக் குழாய் கிணறுகள் அமைக்கப்பட உள்ளதாக அறிய கிடைக்கும் நிலையில் குறித்த பகுதி முழுமையாக உவர்நீராக மாறும் சூழலும் ஏற்பட்டுள்ளது.

குறித்த திட்டத்துக்காக வேலனை பிரதேச செயலாளரின் அனுமதி உடன் அரச காணி ஒன்றின் ஊடாக இரண்டாவது பாதை அமைக்கப்படவுள்ள நிலையில் வயல் நிலங்களில் இருந்து வெளியேறும் மேலதிக நீரின் திசைகள் மாற்றமடைவதுடன் நீர் தேங்கும் அபாயமும் ஏற்பட்டுள்ளது.

சில மாதங்களுக்கு முன்னர் குறித்த திட்டத்துக்காக அப்பகுதியில் இருந்த பனை மரங்கள் வெட்டப்பட்டு இரவோடு இரவாக எரியூட்டப்பட்டது.

ஆகவே வயல் நிலங்களும் விவசாயிகளும் பாதிக்கப்படாமல் குறித்த திட்டத்தை செயல்படுத்துவதற்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்" என அப்பிரதேச மக்கள் கோரிக்கை விடுத்திருந்தனர்.

ReeCha
மரண அறிவித்தல்

உரும்பிராய், நீர்கொழும்பு, வெள்ளவத்தை

08 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, சித்தன்கேணி, London, United Kingdom

10 Jul, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
6ம் ஆண்டு நினைவஞ்சலி

பலாலி, கொழும்பு, Montreal, Canada

15 Jul, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், திருகோணமலை, நீராவியடி

22 Jun, 2025
மரண அறிவித்தல்

காரைநகர், Zürich, Switzerland

02 Jul, 2026
நன்றி நவிலல்

மானிப்பாய், London, United Kingdom

09 Jun, 2026
14ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, Scarbrough, Canada

10 Jul, 2012
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், மல்லாவி, ஆனைப்பந்தி, Toronto, Canada

21 Jul, 2025
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Chennai, India, London, United Kingdom

10 Jul, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு 1ம் வட்டாரம்

07 Jul, 2021
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, Toronto, Canada

08 Jul, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டி, மலேசியா, Malaysia, கொழும்பு

09 Jul, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை

21 Jun, 2025
மரண அறிவித்தல்

சுழிபுரம், வெள்ளவத்தை

07 Jul, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

09 Jul, 2011
மரண அறிவித்தல்

யாழ் அச்சுவேலி தோப்பு, Jaffna, Toronto, Canada

28 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி தெற்கு, Harrow, United Kingdom

20 Jun, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

சுதுமலை வடக்கு

12 Jul, 2023
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Chessington, United Kingdom

08 Jul, 2017
16ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டிக்குளி, கனடா, Canada

08 Jul, 2010
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Toronto, Canada, Mississauga, Canada

08 Jul, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொக்குவில் கிழக்கு, கொழும்பு

10 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி