மிகக் கொடூரமாக கொல்லப்பட்ட சிறை அதிகாரிகள் : பிரேத பரிசோதனையில் அதிர்ச்சி தகவல்

Negombo Death Prisons in Sri Lanka
By Jaso Jul 09, 2026 04:24 PM GMT
Report

நீர்கொழும்பு சிறையில் நடந்த வன்முறை மோதலில் உயிரிழந்த சிறை அதிகாரிகளின் பிரேதப் பரிசோதனையில், அவர்கள் கொடூரமாகத் தாக்கப்பட்டது தெரியவந்துள்ளது.

பிரேதப் பரிசோதனை அறிக்கைகளின்படி, தலையில் ஏற்பட்ட கடுமையான காயங்களால் அதிகாரிகள் உயிரிழந்தனர்.

ஜூலை 5 மற்றும் 6 ஆகிய திகதிகளில் நீர்கொழும்பு சிறையில் நடந்த வன்முறைச் சம்பவத்தில் உயிரிழந்த சிறை அதிகாரிகள் மற்றும் கைதிகள் உட்பட 24 பேருக்கு, ஐந்து பேர் கொண்ட தடயவியல் குழு பிரேதப் பரிசோதனை நடத்தியுள்ளது.

துப்பாக்கிசூடு மற்றும் தாக்குதல்களால் மரணம்

 அதன்படி, பிரேதப் பரிசோதனையில் 14 மரணங்கள் துப்பாக்கிச் சூட்டாலும், மேலும் 9 மரணங்கள் தாக்குதல்களாலும் ஏற்பட்டதாகத் தெரியவந்துள்ளது. ஒரு மரணத்தில் முடிவு எட்டப்படவில்லை.

மிகக் கொடூரமாக கொல்லப்பட்ட சிறை அதிகாரிகள் : பிரேத பரிசோதனையில் அதிர்ச்சி தகவல் | Negombo Prison Officers Killed In Brutal Assault

கொழும்பு தேசிய மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்தபோது உயிரிழந்த சிறைக் காவலரின் மரணம் குறித்த தகவல் இன்று (09) மாளிககந்த நீதவான் நீதிமன்றத்திற்கு தெரிவிக்கப்பட்டது.மேலும், பிரேதப் பரிசோதனை தொடர்பான சான்றுகளின் ஆய்வும் நிறைவடைந்துள்ளது.

நீர்கொழும்பு மருத்துவமனையில் வைக்கப்பட்டிருந்த 28 உடல்களில், 24 உடல்களின் பிரேதப் பரிசோதனை நிறைவடைந்து, அவை அவர்களது உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. மீதமுள்ள நான்கு உடல்களுக்கான பிரேதப் பரிசோதனை தற்போது நடைபெற்று வருகிறது.

இறந்தவர்களில் ஒரு இந்திய நாட்டவரும் அடங்குவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நீர்கொழும்பு சிறைச்சாலைக் கலவரத்தின் முக்கிய சந்தேக நபரான சுரேஷ் படுகாயம் : வெளியான பின்னணி

நீர்கொழும்பு சிறைச்சாலைக் கலவரத்தின் முக்கிய சந்தேக நபரான சுரேஷ் படுகாயம் : வெளியான பின்னணி

பிரேத பரிசோதனையை நடத்த  தடயவியல் மருத்துவக் குழு

இந்தச் சம்பவம் தொடர்பான பிரேதப் பரிசோதனையை நடத்துவதற்காக, மருத்துவர் சுஜீவ விக்ரமநாயக்க தலைமையில் ஐந்து பேர் கொண்ட தடயவியல் மருத்துவக் குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளது. இக்குழுவில் மருத்துவர் பிரசன்ன அப்புஹாமி, மருத்துவர் சமந்தா விஜேரத்ன, மருத்துவர் சமிந்த ராஜபக்ச மற்றும் மருத்துவர் ரமேஷ் அக்கியாவன்ன ஆகியோர் அடங்குவர்.

மிகக் கொடூரமாக கொல்லப்பட்ட சிறை அதிகாரிகள் : பிரேத பரிசோதனையில் அதிர்ச்சி தகவல் | Negombo Prison Officers Killed In Brutal Assault

இதற்கிடையில், 7ஆம் திகதி உயிரிழந்த எட்டு சிறை அதிகாரிகள் மற்றும் 21 கைதிகளின் பிரேதப் பரிசோதனைகளை நடத்தி, அதன் அறிக்கைகளை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்குமாறு நீர்கொழும்பு தலைமை நீதிபதி ஷிலானி பெரேரா உத்தரவிட்டிருந்தார். மேலும், இச்சம்பவம் தொடர்பாக விரிவான அறிக்கை ஒன்றை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்குமாறு காவல்துறைக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.

கைதிகளை மேலும் தடுத்து வைப்பது பொருத்தமற்றது

மறுபுறம், இச்சம்பவத்தைத் தொடர்ந்து நீர்கொழும்பு சிறைச்சாலை ஒரு குற்ற நிகழ்விடமாகக் கருதப்படுவதால், அங்கு கைதிகளை மேலும் தடுத்து வைப்பது பொருத்தமற்றது என சிறை நிர்வாகம் முடிவு செய்துள்ளதாக நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சு ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.

இந்த வன்முறைச் சம்பவத்தால் சிறை வளாகத்தில் கடுமையான சேதம் ஏற்பட்டுள்ளதுடன், சேதம் குறித்த இறுதி மதிப்பீட்டு அறிக்கை இன்னும் தயாரிக்கப்படவில்லை என்றும் சிறை அதிகாரிகள் மேலும் தெரிவித்துள்ளனர்.

கைதிகளைத் தடுத்து வைப்பதற்கு பொருத்தமற்ற இடமாக நீர்கொழும்பு சிறைச்சாலை! அமைச்சகம் அறிக்கை

கைதிகளைத் தடுத்து வைப்பதற்கு பொருத்தமற்ற இடமாக நீர்கொழும்பு சிறைச்சாலை! அமைச்சகம் அறிக்கை

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!


ReeCha
6ம் ஆண்டு நினைவஞ்சலி

பலாலி, கொழும்பு, Montreal, Canada

15 Jul, 2020
நன்றி நவிலல்

மானிப்பாய், London, United Kingdom

09 Jun, 2026
14ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, Scarbrough, Canada

10 Jul, 2012
மரண அறிவித்தல்
8ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Chennai, India, London, United Kingdom

10 Jul, 2025
மரண அறிவித்தல்

காரைநகர், Zürich, Switzerland

02 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், மல்லாவி, ஆனைப்பந்தி, Toronto, Canada

21 Jul, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு 1ம் வட்டாரம்

07 Jul, 2021
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, Toronto, Canada

08 Jul, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டி, மலேசியா, Malaysia, கொழும்பு

09 Jul, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை

21 Jun, 2025
மரண அறிவித்தல்

சுழிபுரம், வெள்ளவத்தை

07 Jul, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

09 Jul, 2011
மரண அறிவித்தல்

யாழ் அச்சுவேலி தோப்பு, Jaffna, Toronto, Canada

28 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி தெற்கு, Harrow, United Kingdom

20 Jun, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

சுதுமலை வடக்கு

12 Jul, 2023
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Chessington, United Kingdom

08 Jul, 2017
மரண அறிவித்தல்

நயினாதீவு 2ம் வட்டாரம், பேர்ண், Switzerland

06 Jul, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டிக்குளி, கனடா, Canada

08 Jul, 2010
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Toronto, Canada, Mississauga, Canada

08 Jul, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொக்குவில் கிழக்கு, கொழும்பு

10 Jun, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி