தமிழ் அரசியல்வாதிகள் தமிழ் மக்களை காப்பாற்றுவதற்காக செயற்படவில்லை - யாழ்ப்பாண பல்கலைக்கழக துணைவேந்தர்(காணொளி)
தமிழ் அரசியல்வாதிகள் அடுத்த மாகாணசபை தேர்தலுக்கு எவ்வாறு செயற்படுவது என்பது தொடர்பில் செயற்படுகிறார்களே தவிர தமிழ் மக்களை காப்பாற்றுவதற்காக செயற்படவில்லை என யாழ்ப்பாண பல்கலைக்கழக துணைவேந்தர் எஸ்.ஸ்ரீசற்குணராஜா தெரிவித்துள்ளார்.
உடுவில் மற்றும் மானிப்பாய் தொகுதியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அமரர் விஸ்வநாதர் தர்மலிங்கத்தின், வலிகாமம் தெற்கு பிரதேச சபை முன்பாக நிறுவப்பட்டுள்ள உருவச் சிலை திறப்பு விழாவில் உரை நிகழ்த்தும் போதே இவ்வாறு தெரிவித்தார்.
இந்த நிகழ்வில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் போராசிரியர் சி.சிறிசற்குணராசா பிரதம விருந்தினராக கலந்துகொண்டு திருவுருவச் சிலையை திரைநீக்கம் செய்துவைத்தார்.
குறித்த நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன், இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான சுரேஸ் பிரேமச்சந்திரன் மற்றும் எம்.கே.சிவாஜிலிங்கம், தெல்லிப்பளை ஸ்ரீ துர்க்காதேவி தேவஸ்தானத்தின் தலைவர் கலாநிதி அறு திருமுருகன், முன்னாள் வடக்கு மாகாண சபை உறுப்பினர் ப.கஜதீபன், பிரதேச சபையின் தவிசாளர்கள், பிரதேச சபை உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டிருந்தனர்.
குறித்த நிகழ்வில் சிறப்புரை ஆற்றிய பல்கலைக்கழக முதல்வர் தமிழ் அரசியல் கட்சிகள் தொடர்பில் பல விமர்சனங்களை தெரிவிக்கும் வகையில் சில கருத்துக்களை முன்வைத்திருந்தார்.