சுனாமி பீதியில் விமானங்களை ரத்து செய்த ஜப்பானிய நிறுவனங்கள்! ரியோ தத்சுகியின் கணிப்பால் அச்சநிலை
ஜப்பானில் இந்த மாதம் ஒரு பெரிய நிலநடுக்கம் ஏற்படும் என்ற வதந்தி, தற்போது சர்வதேச விமான சேவைகள் மற்றும் சுற்றுலா திட்டங்களில் பெரிய பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.
ரியோ தத்சுகி என்பரால் எழுத்தப்பட்டு 1999ஆம் ஆண்டு வெளியான “The Future I Saw” என்ற மங்காவில்(ஜப்பானிய நூல்), 2025 ஜூலை 5 அன்று பேரழிவு ஏற்படும் என கணிக்கப்பட்டிருந்த தகவல் சமீபத்தில் இணையத்தில் பரவி, பயணிகள் மனதில் பயத்தை ஏற்படுத்தியுள்ளது.
அச்சத்தில் பயணிகள்
இதன் விளைவாக Greater Bay Airlines (ஹாங்காங்), ஜப்பானின் டோகுஷிமா நோக்கி செல்லும் விமான சேவையை, பயணத் தேவை குறைந்ததால் நிறுத்தியுள்ளது.
அத்தோடு, அந்நாட்டின் EGL Tours உள்ளிட்ட சுற்றுலா நிறுவனங்கள், ஜப்பான் பயணங்களுக்கான முன்பதிவுகள் பாதியாக குறைந்துவிட்டதாக தெரிவிக்கின்றன.
இதேவேளை, பல்வேறு சலுகைகளும் ம நிலநடுக்க காப்பீட்டுகளும் வழங்கப்பட்டாலும் பயணங்களை மேற்கொள்ள பயணிகள் தயக்கம் காட்டுவதாக அந்நாட்டு ஊடகங்கள் குறிப்பிடுகின்றன.
அறிவியல் ஆதாரம்
இந்த நிலையில், ஜப்பான் நிலநடுக்க மண்டலத்தில் (Ring of Fire) அமைந்துள்ளது என்பதால் நிலநடுக்கங்கள் ஏற்படுவது இயல்பு என்றும் ஆனால் இந்த வதந்திக்கு எந்த அறிவியல் ஆதாரமும் இல்லை என நிபுணர்கள் உறுதியாகத் தெரிவித்துள்ளனர்.
இவ்வாறானதொரு பின்னணியில, ஜப்பான் ஏப்ரல் மாதத்தில் சர்வதேச சுற்றுலாவில் 3.9 மில்லியன் பயணிகள் என உச்சத்தைக் கண்டிருந்ததாலும், மே மாதத்தில் ஹாங்காங்கிலிருந்து பயணிகள் வருகை 11% குறைந்துள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
