தமிழகத்தில் திருமண பந்தத்தில் இணையும் ஜீவன் தொண்டமான்: இந்தியா பறக்கும் ரணில்
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க (Ranil Wickremesinghe) இன்றைய தினம் இந்தியா பயணமாக உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ஜீவன் தொண்டமானின் திருமண நிகழ்வில் பங்கேற்பதற்காக ரணில் இந்தியா பயணமாக உள்ளார்.
ஐ.தே.கவின் (UNP) முக்கிய பிரமுகரான முன்னாள் அமைச்சர் ஹரின் பெர்ணான்டோ இந்த தகவலை தெரிவித்துள்ளார்.
நெருங்கிய உறவு
எனவே நுகேகொடை கூட்டத்தில் ரணில் விக்ரமசிங்க பங்கேற்பது சாத்தியமில்லை என்றும் இரண்டாம்கட்ட தலைமைத்துவத்தை கட்டியெழுப்புவதே ரணிலின் நோக்கம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜீவன் தொண்டமானின் திருமணம் எதிர்வரும் 23ஆம் திகதி தமிழ்நாடு, திருப்பத்தூரில் நடைபெறவுள்ளது.
ஜீவனின் பாட்டனார் செளமியமூர்த்தி தொண்டமான் காலத்தில் இருந்து மணமகளின் உறவினர்களுடன் தொண்டமான் குடும்பத்தினருக்கு நெருங்கிய உறவு இருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
ஜீவன் தொண்டமானின் திருமண நிகழ்வில் இலங்கையில் இருந்து மேலும் பல முக்கிய அரசியல் பிரமுகர்கள், இராஜதந்திரிகள் பங்கேற்கவுள்ளனர்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
இறக்கைகள் வெட்டப்பட்ட நிலையில் கலகம் செய்வாரா பிமல்..!
3 நாட்கள் முன்