அரங்கேறிய கொடூரம் - தாய் மற்றும் மகன் மீது அசிட் தாக்குதல் - தாய் பலி
பெண்ணொருர் மீதும் அவரது 16 வயது மகன் மீதும் அசிட் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
குறித்த சம்பவம் நேற்று (20) இரவு அயகம காவல்துறை பிரிவின் கொழம்பேவ பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருகையில், இந்த அசிட் தாக்குதல் நடத்தப்பட்டதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது.
தனிப்பட்ட தகராறு
அசிட் தாக்குதலால் பலத்த காயமடைந்த தாயையும் மகனையும் காவல்துறை அதிகாரிகள் குழுவொன்று சம்பவ இடத்துக்குச் சென்று, அயகம வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.
இதன்போது கொழம்பேவ, கவரகிரிய பிரதேசத்தைச் சேர்ந்த 40 வயதான தாய் உயிரிழந்தார்.
அயலவர்கள் குழுவொன்றுடன் ஏற்பட்ட தனிப்பட்ட தகராறு காரணமாகவே இந்தக் குற்றம் நடந்துள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
உயிரிழந்தவரின் சடலம் இரத்தினபுரி வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன், சந்தேக நபர்களைக் கைது செய்வதற்காக அயகம காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |