காசாவில் இடம்பெறும்'யூத பயங்கரவாதம்': முன்னாள் இஸ்ரேலியப் பிரதமர் காட்டம்
அப்பாவி அராபியர்கள் உள்ளே இருக்கும்போது வீடுகளை எரிப்பது "யூத பயங்கரவாதம்" ஆகும் என்று முன்னாள் இஸ்ரேலியப் பிரதமர் நஃப்தாலி பென்னட் தெரிவித்துள்ளார்.
"அப்பாவி அராபியர்களின் வீட்டை, அவர்கள் உள்ளே இருக்கும்போது யாராவது வந்து எரித்தால், நிச்சயமாக அது யூத பயங்கரவாதம்தான்." "அது தேசியவாதக் காரணங்களுக்காகச் செய்யப்பட்டால், அதுதான் அதன் வரையறை," என்று ஞாயிற்றுக்கிழமை பெஷேவா மாநாட்டில் பென்னட் கூறினார்.
குடியேற்ற இயக்கத்திற்கு எவ்வாறு உதவுகிறது
இத்தகைய செயல்கள் கண்டிக்கப்பட வேண்டும் என்று கூறிய அவர், "இது குடியேற்ற இயக்கத்திற்கு எவ்வாறு உதவுகிறது என்பது எனக்குப் புரியவில்லை," என்றும் மேலும் தெரிவித்தார்.

ஒக்டோபர் 27 அன்று நடைபெறவுள்ள இஸ்ரேலின் பொதுத் தேர்தலுக்கு முன்னதாக பென்னட்டின் இந்தக் கருத்துக்கள் வந்துள்ளன.
அதிகரித்துள்ள ஆக்கிரமிப்பாளர்களின் தாக்குதல்கள்
இந்தத் தேர்தல் நெதன்யாகுவின் லிகுட் கட்சி மற்றும் அவரது முக்கிய சவாலர்களான, குறிப்பாக முன்னாள் இராணுவத் தலைமைத் தளபதி காடி ஐசென்கோட் மற்றும் பென்னட் ஆகியோரை மையமாகக் கொண்டுள்ளது.

சமீபத்திய நாட்களில் ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையில் இஸ்ரேலிய இராணுவம் மற்றும் ஆக்கிரமிப்பாளர்களின் தாக்குதல்கள் அதிகரித்துள்ள சூழலில் இந்தக் கருத்துக்கள் வெளியாகியுள்ளன.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |