ஊடகவியலாளர் ராமசந்திரன் படுகொலை : ஈபிடிபி, இராணுவமே காரணம்..! சிவாஜிலிங்கம் பகிரங்க குற்றச்சாட்டு
ஊடகவியலாளர் ராமச்சந்திரன் படுகொலைக்கு ஈபிடிபி மற்றும் இராணுவமே காரணம் என வல்வெட்டிதுறை நகரபிதாவும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான M.k.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.
கடத்தி படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் ராமச்சந்திரனுக்கு நீதி வேண்டி வடமராட்சி ஊடக இல்லத்தால் நடாத்தப்பட்ட கவனயீர்ப்பு போராட்டத்தில் கலந்துகொண்டபின் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.அவர் மேலும் தெரிவித்ததாவது
நிமலராஜன் படுகொலை
போர் நடைபெற்று கொண்டிருந்த காலத்திலும் சரி அதற்கு பின்னரும் சரி ஊடகவியலாளர்களுக்கு எதிரான அடக்கு முறைகள் குறிப்பாக ஜனாதிபதியாக இருந்த மகிந்த ராஜபக்ச காலத்தில் தொடங்கிய விடயங்கள், இன்றைக்கு தென்னிலங்கையில் சிங்கள ஊடகவியலாளர்களது விடயங்களை கிளப்புபவர்கள் தமிழ் ஊடகவியாளர்களது விடயங்களில் எந்தவித முன்னேற்றமும் இல்லை.

அது யாராக இருக்கட்டும், நிமலராஜன் படுகொலையாக இருக்கட்டும் எந்த படுகொலையாக இருக்கட்டும் எதற்கும் நீதி இல்லை என்கின்ற நிலைதான் இருந்துகொண்டிருக்கிறது.
பலரது படுகொலைகள் இடம்பெற்றிருக்கிறது. வடக்கு கிழக்கு பூராகவும் பலரது படுகொலைகள் நடைபெற்றன.
மணல் கொள்ளைக்கு எதிராக குரல் கொடுத்த ஊடகவியலாளர்
இது 2007 ம் ஆண்டிலே மணல் கொள்ளைக்கு எதிராக குரல் கொடுத்த இந்த ஊடகவியலாளர் ராமசந்திரன் அவரது கட்டுரை பத்திரிகையில் வெளியாகிய இரண்டாவது நாள் அவர் கடத்தப்படுகின்றார் என்றால் இராணுவமும், epdp யும் தான் பொறுப்பு என்று அந்த காட்டுரையில் குறிப்பிட்டிருக்கின்றார்.

அது மட்டுமல்ல அவர் இராணுவ முகாமில் தடுத்து வைக்கப்பட்டிருந்தபோது இராணுவத்தினரின் தொலைபேசியில் குடும்பத்தாருடன் பேசியிருக்கின்றார்.
கடத்தப்பட்டதற்கான ஆதாரங்கள், சாட்சியங்கள் ஒவ்வொன்றாக இல்லாது போகின்றது. அவரது தந்தையார், தாயார் இறந்துகொண்டிருக்க கூடிய நேரத்திலே கிராம சேவகர் கூட அவரை நான் பார்த்தேன் என்று கூறியிருக்கிறர்.
இவர்கள் காலம் கடத்துகின்றனர். நிலைமாறு கால நீதி கிடைக்காமல் எல்லாம் சுத்துமாத்தாக நீத்து போக செய்கின்ற நிலைதான். ஆகவே உடனடியாக சர்வதேசம் தலையிட்டு இதற்கு நீதி கிடைக்க செய்ய வேண்டும் என்பதுதான் எமது விருப்பம் என்றார்
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |