பிரித்தானியாவில் கடலின் மடியில் குழுமத்தின் நூல் வெளியீட்டு விழா...!
பிரித்தானியாவில் “கடலின் மடியில்” குழுமத்தின் தயாரிப்பில் "கடலில் கரைந்துவிட்ட காலங்களும்... வரலாற்றில் தடம் பதித்துவிட்ட நினைவுகளும் - பாகம் 01" எனும் நூல் வெளியீட்டு விழா சிறப்பாக இடம்பெற்றுள்ளது.
குறித்த நிகழ்வு பிரித்தானியாவின் ஆல்பர்டன் (Alperton) சமூகப் பள்ளி மண்டபத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை (01.03.2026) முன்னெடுக்கப்பட்டுள்ளது.
தமிழீழ விடுதலைப் புலிகளின் கடல்சார் விநியோகப் பிரிவில் ஆழக்கடலோடிகளாகப் பணியாற்றிய எஸ்.கே-வின் நேரடி அனுபவங்களின் தொகுப்பாக இந்த நூல் ஆக்கப்பட்டுள்ளது.
பொது மாவீரர்
நிகழ்வில் பொதுச் சுடரினை 2-ஆம் லெப் மலரின் சகோதரரும் பிரித்தானியா வீரத்தமிழர் முன்னணியின் ஒருங்கிணைப்பாளருமான கதிர்காமநாதன் ஏற்றிவைக்க, பிரித்தானியாவின் தேசியக் கொடியினை அகேனம் அறக்கட்டளையின் நிறுவனர் கிருபன் ஏற்றினார்.

தமிழீழக் கொடியினைத் தமிழீழ விடுதலைப் புலிகளின் மருத்துவப் பிரிவு பொறுப்பாளர் மனோஜ் ஏற்ற பொது மாவீரருக்கான திருவுருவப் படத்திற்கு ஈகைச்சுடரினை லெப். கேணல் சுபாஸின் சகோதரர் சதீஸ் (விஜேந்திரன்) ஏற்றினார்.
அத்தோடு, மலர்மாலையினை கவிதா அணிவித்தார்.
வெளியீட்டு உரை
நிகழ்வில் வெளியீட்டு உரையினைத் தமிழீழ வைப்பகத்தின் ஆளுகை மேலாளர் பாலா மாஸ்டர் வழங்க ஏற்புரையினை மருத்துவப் போராளி பொழிலன் வழங்கினார்.
தொடர்ந்து சிறப்புரையினைத் தமிழீழ விளையாட்டுத் துறைப் பிரிவு பொறுப்பாளர் போராளி இன்பன் மாஸ்டர் வழங்கினார்.

உறுதியேற்புடன் தேசியக் கொடிகள் கையேற்கப்பட்டு நிகழ்வு நிறைவடைந்தது.
இதேவேளை, சுவிட்சர்லாந்து, அவுஸ்திரேலியா, கனடா, ஜேர்மனி மற்றும் மலேசியா ஆகிய நாடுகளிலும் சமநேரத்தில் இந்நூல் வெளியிடப்பட்டமை குறிப்பிடத்தக்கது
🛑YOU MAY LIKE THIS...! 👇🏻
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |