போதைபொருள் விற்பனையில் மொட்டு கட்சி உறுப்பினர் அதிரடி கைது
Sri Lanka Police
Sri Lanka
Law and Order
By Shalini Balachandran
கம்பளை (Gampola) நகர சபையின் பொதுஜன பெரமுண கட்சி சார்ந்த நகர்மன்ற உறுப்பினர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த நபர் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டிருந்த நிலையில் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
அண்மையில் நடைபெற்று முடிந்த உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தலில் பொதுஜன பெரமுண கட்சி சார்பில் போட்டியிட்டு அதிகூடிய வாக்குகளுடன் கம்பளை நகர சபைக்குத் தெரிவான உறுப்பினர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
வழக்குகள் விசாரணை
குறித்த நபர் மீது இதற்கு முன்னரும் கள்ளச்சாராயம் காய்ச்சியது உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் விசாரணையில் இருப்பதாக தெரிய வந்துள்ளது.
இந்தநிலையில் கஞ்சாவுடன் கைது செய்யப்பட்ட அவரை எதிர்வரும் 30 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கம்பளை மாஜிஸ்திரேட் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
