கெஹலிய ரம்புக்வெல்லவின் மகள் இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் முன்னிலை
முன்னாள் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவின் (Keheliya Rambukwella) மகள் அமாலி ரம்புக்வெல்ல (Amali Rambukwella), இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலையாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
வாக்குமூலம் வழங்குவதற்காக இன்று (29) காலை இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவில் (CIABOC) முன்னிலையாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
தனது கணக்கில் பெறப்பட்ட அனைத்து பணத்தையும் கெஹலிய ரம்புக்வெல்லவின் மகள் அமலி ரம்புக்வெல்ல பெற்றுக்கொண்டதாக கெஹலியவின் செயலாளர் நிஷாந்த பண்டார பஸ்நாயக்க அண்மையில் தெரிவித்திருந்தார்.
இலஞ்ச ஊழல் ஆணைக்குழு
அத்துடன் தனது பெயரில் ஒரு கணக்கு திறக்கப்பட்டிருந்தாலும், அந்தக் கணக்கிற்கான புத்தகம் உட்பட அனைத்தும் அமலி ரம்புக்வெல்லவிடம் இருந்ததாக பஸ்நாயக்க இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவிடம் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
கொழும்பு தலைமை நீதிபதி தனுஜா லக்மாலி முன்னிலையில் கடந்த 26ஆம் திகதி இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழு இதனை குறிப்பிட்டது.
இந்தநிலையில், தற்போது கெஹலிய ரம்புக்வெல்லவின் மகள் அமலி ரம்புக்வெல்ல விசாரணைகளுக்காக இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவில் முன்னிலையாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
