சமூக செயற்பாட்டாளர் கெலும் ஜயசுமன பிணையில் விடுவிப்பு!

Sri Lankan Tamils Sri Lanka Law and Order
By Raghav Dec 04, 2024 07:26 AM GMT
Report

முகநூல் ஊடாக வடக்கில் மாவீரர் வைபவங்கள் நடப்பதாக பொய்யான தகவலை பரப்பிய சம்பவம் தொடர்பில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த சமூக ஆர்வலர் கலும் ஜயசுமனவை விடுதலை செய்யுமாறு கொழும்பு (Colombo) நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இது தொடர்பான முறைப்பாடு கொழும்பு பிரதான நீதவான் திலின கமகே (Thilina Gamage) முன்னிலையில் இன்று (04.12.2024) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

குற்றப் புலனாய்வுத் திணைக்களம் சார்பில் முன்னிலையான அதிகாரிகள் நீதிமன்றத்தில் சாட்சியமளித்ததுடன், பிரான்ஸில் உள்ள பெண் ஒருவரின் முகநூல் பக்கத்தில் வெளியிடப்பட்ட விடுதலைப் புலிகளின் தடை செய்யப்பட்ட சின்னங்கள் அடங்கிய புகைப்படத்தை சந்தேகநபர் தரவிறக்கம் செய்து மீள்பதிவு செய்துள்ளார்.

வடக்கு - கிழக்கு தமிழர்களின் அரசியல் போர்க்காலமே தேசிய மக்கள் சக்தியின் ஆட்சி! மா.சத்திவேல்

வடக்கு - கிழக்கு தமிழர்களின் அரசியல் போர்க்காலமே தேசிய மக்கள் சக்தியின் ஆட்சி! மா.சத்திவேல்

குற்றப் புலனாய்வு

இதன் மூலம் பொது அமைதி மற்றும் நாடுகளுக்கிடையிலான நல்லிணக்கம் சீர்குலைந்துள்ளதாக தெரிவித்த அதிகாரிகள், வடக்கில் அவ்வாறானதொரு விழா நடத்தப்படவில்லை எனவும் தெரிவித்துள்ளனர்.

சமூக செயற்பாட்டாளர் கெலும் ஜயசுமன பிணையில் விடுவிப்பு! | Kelum Bails For Jayasumana

மேலும், விசாரணைகள் நிறைவடையாத நிலையில், சந்தேக நபரை மேலும் விளக்கமறியலில் வைக்குமாறு குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் கோரிக்கை விடுத்தனர்.

குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகளிடம் கேள்வியொன்றை முன்வைத்த நீதவான், இந்தச் செயலினால் பொது ஒழுங்கு மீறப்பட்டதை உறுதிப்படுத்தும் வாக்குமூலங்களைப் பதிவு செய்து நீதிமன்றில் சமர்ப்பித்துள்ளீர்களா எனக் கேட்டார்.

ஒரு துண்டு காகிதத்தைக் கூட பார்க்காமல் பேசிய ஜனாதிபதி - பிரதமர் வழங்கிய விளக்கம்

ஒரு துண்டு காகிதத்தைக் கூட பார்க்காமல் பேசிய ஜனாதிபதி - பிரதமர் வழங்கிய விளக்கம்

சரீரப் பிணை

இதற்குப் பதிலளித்த குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகள், அவ்வாறான வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டு நீதிமன்றில் சமர்ப்பிக்கப்படவில்லை எனத் தெரிவித்துள்ளனர்.

சமூக செயற்பாட்டாளர் கெலும் ஜயசுமன பிணையில் விடுவிப்பு! | Kelum Bails For Jayasumana

பொதுமக்களுக்கு இடையூறு ஏற்பட்டதாக ஆதாரமின்றி சந்தேகநபரை எவ்வாறு விளக்கமறியலில் வைக்க முடியும் என வினவிய நீதவான், ஆதாரமின்றி சந்தேகநபர்களை விளக்கமறியலில் வைக்க முடியாது எனவும் தெரிவித்துள்ளார்.

இதன்படி, சந்தேகநபரை இரு சரீரப் பிணையில் விடுவிக்க உத்தரவிட்ட நீதவான், முறைப்பாட்டை ஏப்ரல் 3ஆம் திகதி மீண்டும் அழைக்குமாறும் உத்தரவிட்டார்.

சர்ச்சைக்குரிய ரில்வின் சில்வாவின் கருத்து : சாணக்கியனுக்கு அரச தரப்பு பதிலடி

சர்ச்சைக்குரிய ரில்வின் சில்வாவின் கருத்து : சாணக்கியனுக்கு அரச தரப்பு பதிலடி

மாவீரர் தின நிகழ்வு தொடர்பாக இனவாத கருத்துக்கள் - பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் கடும் எச்சரிக்கை

மாவீரர் தின நிகழ்வு தொடர்பாக இனவாத கருத்துக்கள் - பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் கடும் எச்சரிக்கை

  செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! 


ReeCha
மரண அறிவித்தல்

அல்வாய் கிழக்கு, London, United Kingdom, நவிண்டில்

08 Mar, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Vasavilan, சுவிஸ், Switzerland

10 Mar, 2016
மரண அறிவித்தல்
நன்றி நவிலல்

இணுவில், Scarborough, Canada

09 Feb, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, சுன்னாகம், Scarborough, Canada

06 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கோப்பாய் மத்தி, Brampton, Canada

07 Feb, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், புங்குடுதீவு 3ம் வட்டாரம், Southgate, United Kingdom

08 Mar, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு 4ம் வட்டாரம், நெடுந்தீவு, பிரான்ஸ், France, London, United Kingdom, நல்லூர்

09 Feb, 2026
மரண அறிவித்தல்

அரியாலை, கொழும்பு

06 Mar, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாவி, தோணிக்கல், Liverpool, United Kingdom

09 Mar, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

நுவரெலியா, Bandarawela, கம்பளை, நாவலப்பிட்டி

08 Mar, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கொழும்பு

17 Feb, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

தொல்புரம், வடலியடைப்பு

09 Mar, 2022
மரண அறிவித்தல்

நல்லூர், Scarborough, Canada

05 Mar, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

Ittavil, எழுதுமட்டுவாள், திருகோணமலை, London, United Kingdom

07 Mar, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

08 Mar, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

08 Mar, 2021
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

வவுனியா, Milton Keynes, United Kingdom

25 Feb, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்புத்துறை, Zürich, Switzerland

02 Mar, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025