72 குண்டுகள் முழங்க முழு அரச மரியாதையுடன் பாக்யராஜின் உடல் தகனம்!
தமிழ் திரையுலகின் முன்னணி இயக்குநரும், நடிகரும், திரைக்கதை ஆசிரியருமான கே. பாக்யராஜின் உடலுக்கு 72 குண்டுகள் முழங்க அரச மரியாதை வழங்கப்பட்டது.
இதனையடுத்து பாக்யராஜின் உடல் சென்னை பெசன்ட் நகரில் உள்ள மின் மயானத்தில் சற்று முன்னர் தகனம் செய்யப்பட்டது.
தமிழ் திரையுலகில் இயக்குநர், நடிகர், திரைக்கதை எழுத்தாளர், வசனகர்த்தா, இசையமைப்பாளர் என பன்முகத் திறமையால் தனக்கென தனி இடத்தைப் பிடித்த பாக்யராஜ் தனது 73 ஆவது வயதில் திடீர் மாரடைப்பு காரணமாக நேற்று (27) சென்னையில் காலமானார்.
முழு அரச மரியாதை
அவரது மறைவுக்கு திரையுலகம், அரசியல் தலைவர்கள் மற்றும் ரசிகர்கள் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்து வரும் நிலையில் அவரது திரைத்துறைக்கான மகத்தான பங்களிப்பை கௌரவிக்கும் வகையில், தமிழ்நாடு அரசு முழு அரச மரியாதையுடன் இறுதிச்சடங்கு நடத்த ஏற்பாடு செய்துள்ளது.

இன்று (28) காலை, சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள அவரது இல்லத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்த உடலுக்கு அரசியல் தலைவர்கள், திரையுலக பிரபலங்கள் மற்றும் ஆயிரக்கணக்கான ரசிகர்கள் நேரில் சென்று இறுதி அஞ்சலி செலுத்தினர்.
அவரது உடல் நுங்கம்பாக்கம் இல்லத்திலிருந்து இறுதி ஊர்வலமாக பெசன்ட் நகர் மின்மயானத்தை நோக்கி எடுத்துச் செல்லப்பட்ட நிலையில் தகனம் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
தமிழர் தேசத்தை உலுக்கும் வீதி விபத்துக்கள்... 3 நாட்கள் முன்