சுரேஷ் சலேவின் கைதை சுயலாபத்திற்காகப் பயன்படுத்தும் முக்கிய புள்ளிகள்..! அம்பலமாகும் உண்மைகள்
அரச புலனாய்வுச் சேவையின் முன்னாள் பணிப்பாளர் சுரேஷ் சலே தொடர்பான விவகாரத்தைத் தங்களின் சுயலாபங்களுக்காகச் சில தரப்பினர் தேவையற்ற அரசியல் பிரச்சினையாகவும் சர்ச்சையாகவும் மாற்றி முன்னெடுத்து வருவதாக முன்னாள் அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.
ஊடகங்களிடம் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் மேலும் தெரிவித்த அவர். “தற்போதைய அரசானது நாட்டின் பெரும்பான்மையான சாதாரண உழைக்கும் மக்களின் பரந்த ஆதரவைப் பெற்று ஆட்சிப் பீடமேறிய ஒரு அரசாங்கமாகும்.
நீண்டகால எதிர்பார்ப்பு
மக்களின் நீண்டகால எதிர்பார்ப்புகளையும் தேவைகளையும் நிறைவேற்றுவதற்கான முதற்கட்ட முயற்சிகளை இந்த அரசு தற்போது முன்னெடுத்து வருகின்ற போதிலும் அதன் ஒட்டுமொத்த செயல்பாடுகளுக்கும் தற்போதே ஒரே வார்த்தையில் எம்மால் சான்றிதழ் வழங்கிவிட முடியாது.
அதேபோன்று எதிர்காலத்தில் நாட்டில் முற்றிலும் புதியதொரு மூன்றாவது அரசியல் சக்தி உருவாகும் எனத் தாம் நம்பவில்லை.

தற்போது களத்தில் உள்ள அரசியல் சக்திகளே தொடர்ந்தும் வெவ்வேறு வடிவங்களில் வெளிப்படும்.
நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச உள்ளிட்ட பலர் பல்வேறு அரசியல் எதிர்பார்ப்புகளுடன் தற்போது தீவிரமாகச் செயற்பட்டு வருகின்ற போதிலும் அவர்களது எதிர்கால அரசியல் பயணத்தில் பெரும் பின்னடைவுகள் ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகளே அதிகமாகக் காணப்படுகின்றன.
நாட்டில் தற்போதைய சூழலில் சட்டம் பொதுவாக நல்ல முறையிலேயே நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது.
கடுமையான குற்றச்சாட்டுகள்
சில குறிப்பிட்ட சந்தர்ப்பங்களில் மாத்திரம் தெரிவு செய்யப்பட்ட நபர்களுக்கு எதிராக வெவ்வேறு வழிகளில் சட்டம் நடைமுறைப்படுத்துவதாக பொதுவெளியில் கடுமையான குற்றச்சாட்டுகள் நிலவி வருகின்ற போதிலும் உண்மையான குற்றவாளிகள், ஊழல்வாதிகள் மற்றும் நாட்டின் சொத்துக்களைக் கொள்ளையடித்த நாசக்கார சக்திகளுக்கு எதிராகத் தராதரம் பாராது சட்டத்தை நடைமுறைப்படுத்துவதில் அரசாங்கம் எவ்வித தயக்கமும் காட்டவில்லை.
சுரேஷ் சலே தொடர்பான விவகாரத்தை தற்போது சில அரசியல் தரப்பினர் திட்டமிட்டபடி ஒரு அரசியல் சர்ச்சையாக மாற்றி வருகின்றனர்.

இந்தச் சம்பவங்களுடன் தொடர்புடைய முக்கிய சூத்திரதாரிகள் சிலர் தற்போது உயிரிழந்துள்ள போதிலும் அதனுடன் தொடர்புடைய அமைப்புகளின் எஞ்சிய உறுப்பினர்கள் அல்லது அவர்களுக்கு வெளியில் இருந்து நிதியுதவியும் ஆதரவும் வழங்கியவர்கள் யாரேனும் இருந்தால் அவர்கள் மீதும் தட்டாமல் சட்ட ரீதியான நடவடிக்கைகள் பாய வேண்டும்.
அதேவேளை, வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள சுரேஷ் சலே தமக்கு இழைக்கப்படும் அநீதிக்கு எதிராக மேற்கொண்டு வரும் உண்ணா நோன்புப் போராட்டம், இறுதி நோக்கில் அவருக்கே பெரும் உடல் ரீதியான பாதிப்பை ஏற்படுத்தக்கூடியதாகும்.
இந்த உத்தியால் அவர் உடலளவில் மேலும் பலவீனமடைந்தால் நீதிமன்றத்தில் தமக்கான சட்டப் போராட்டத்தையும் வழக்கையும் தைரியமாக முன்னெடுத்துச் செல்வதற்குத் தேவையான மன வலிமை
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
தமிழர் தேசத்தை உலுக்கும் வீதி விபத்துக்கள்... 2 நாட்கள் முன்