2026 ஃபிஃபா உலகக் கோப்பை இறுதிப் போட்டி! கேரளாவில் பாடசாலைகளுக்கு விடுமுறை
2026 ஃபிஃபா உலகக் கோப்பை இறுதிப் போட்டியை மாணவர்கள் கண்டுகளிப்பதற்காக, கேரளா அரசு மாநிலம் முழுவதும் உள்ள பாடசாலைகள் ஜூலை 20, திங்கட்கிழமையை விடுமுறையாக அறிவித்துள்ளது.
அர்ஜென்டினா மற்றும் ஸ்பெயின் அணிகளுக்கு இடையேயான இறுதிப் போட்டி இந்தியாவில் ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு தாண்டிய பின் (திங்கட்கிழமை அதிகாலை) நடைபெறவுள்ளதால், விடுமுறை வழங்குமாறு பொதுமக்களிடமிருந்து கோரிக்கைகள் அதிகரித்ததைத் தொடர்ந்து கேரளாவின் பொதுக் கல்வித் துறை இந்த முடிவை எடுத்துள்ளது.
கேரளா மாநிலம், குறிப்பாக அர்ஜென்டினா மற்றும் பிரேசில் அணிகளுக்கு மிகவும் வலுவான கால்பந்து ரசிகர் பட்டாளத்தைக் கொண்ட ஒரு பகுதியாகும்.
பொது விடுமுறை
இதனால் உலகக் கோப்பை இறுதிப் போட்டியையொட்டி மாநிலம் முழுவதும் பெரிய அளவிலான திரையிடல்களும் கொண்டாட்டங்களும் எதிர்பார்க்கப்படுகின்றன.

இருப்பினும், இந்த விடுமுறை அறிவிப்பு பொதுக் கல்வித் துறையின் கீழ் உள்ள பாடசாலைகளுக்கு மட்டுமே பொருந்தும் என்றும் அனைத்து கல்லூரிகளுக்கும் மாநிலம் தழுவிய பொது விடுமுறை எதுவும் இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஃபிஃபா உலகக் கோப்பை இறுதிப் போட்டி அமெரிக்காவில் ஜூலை 19, ஞாயிற்றுக்கிழமை அன்று நடைபெறவுள்ள நிலையில், இப்போட்டி இந்திய நேரப்படி நள்ளிரவுக்குப் பிறகே தொடங்குகின்றமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
நீதிக்காகக் காத்திருக்கும் ஈழத் தமிழினம்… சர்வதேச நீதி தினம்… 9 மணி நேரம் முன்