கேரளாவை உலுக்கிய கொடூரம்: ஒன்றரை வயதுக் குழந்தை அடித்துக் கொலை - தாய் உட்பட இருவர் கைது!

Kerala Law and Order World
By Shalini Balachandran Jun 01, 2026 08:32 AM GMT
Report

கேரளாவில் ஒன்றரை வயதுக் குழந்தை ஒன்று உடல் ரீதியான கடுமையான தாக்குதலுக்கு உள்ளாகி உயிரிழந்த சம்பவம் பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.

நெடுமங்காடு அருகே உள்ள பனவூர் பகுதியில் வசித்து வந்த ஆர்ஷித் என்ற ஒன்றரை வயதுக் குழந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளது.

சம்பவம் தொடர்பாகக் குழந்தையின் தாய் மற்றும் அவருடன் திருமணத்தை மீறிய உறவில் இருந்த நபர் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தங்கத்தின் விலையில் ஏற்பட்டுள்ள அதிரடி மாற்றம்...!

தங்கத்தின் விலையில் ஏற்பட்டுள்ள அதிரடி மாற்றம்...!

உடல்நலக்குறைவு 

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், கடந்த வெள்ளிக்கிழமை மாலை திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டதாகத் தெரிவித்து அவரது தாய் மற்றும் குறித்த நபரால் குழந்தை மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளது.

இருப்பினும், மருத்துவமனைக்குக் கொண்டு வரும் வழியிலேயே குழந்தை இறந்துவிட்டதாக மருத்துவர்கள் அறிவித்துள்ளனர்.

கேரளாவை உலுக்கிய கொடூரம்: ஒன்றரை வயதுக் குழந்தை அடித்துக் கொலை - தாய் உட்பட இருவர் கைது! | Kerala Toddler Murdered By Mother And Lover

உணவு சாப்பிட்ட பிறகு குழந்தை திடீரென மயங்கி விழுந்துவிட்டதாக சந்தேகநபர்கள் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில், காவல்துறையினர் முதற்கட்டமாக இது இயற்கைக்கு மாறான மரணம் (Unnatural death) என வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

இருப்பினும் குழந்தையின் பிரேதப் பரிசோதனை (Autopsy) அறிக்கையில் குழந்தை கொடூரமாகத் தாக்கப்பட்டு அந்தத் தாக்குதலால் ஏற்பட்ட காயங்கள் காரணமாகவே உயிரிழந்தது என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

மருத்துவ அறிக்கை அவர்களின் பொய்யான வாக்குமூலத்தை முறியடித்ததைத் தொடர்ந்து சனிக்கிழமை இரவு குழந்தையின் தாய் அகிலா (Akhila) மற்றும் அவருடன் இருந்த நபர் அஷ்கர் (Ashkar) ஆகியோரைக் காவல்துறையினர் கைது செய்தனர்.

பற்றி எரிந்த யாழ். பொது நூலகம் - வரலாற்றுக் கொடுமை அரங்கேறி 45 ஆண்டுகள்

பற்றி எரிந்த யாழ். பொது நூலகம் - வரலாற்றுக் கொடுமை அரங்கேறி 45 ஆண்டுகள்

மக்கள் ஆவேசம்

இந்த நிலையில் ஞாயிற்றுக்கிழமை (31-05-2026) விசாரணையின் ஒரு பகுதியாக ஆதாரங்களைச் சேகரிப்பதற்காக சந்தேகநபர்கள் இருவரும் அவர்கள் வசித்து வந்த வீட்டிற்குக் காவல்துறையினர் பாதுகாப்புடன் அழைத்து வரப்பட்டனர்.

அப்போது அங்கு திரண்டிருந்த நூற்றுக்கணக்கான உள்ளூர் மக்கள், இருந்த குறித்த நபரைக் கடுமையாகத் தாக்க முற்பட்டுள்ளனர்.

கேரளாவை உலுக்கிய கொடூரம்: ஒன்றரை வயதுக் குழந்தை அடித்துக் கொலை - தாய் உட்பட இருவர் கைது! | Kerala Toddler Murdered By Mother And Lover

குழந்தையைக் கொன்ற பாவி என முழக்கமிட்டபடி மக்கள் ஆவேசமடைந்ததால் நிலைமையைக் கட்டுப்படுத்த காவல்துறையினர் பெரும் சிரமப்பட்டுள்ளனர்.

சூழல் மோசமடைந்ததைத் தொடர்ந்து காவல்துறையினர் அவசர அவசரமாக ஆதாரங்களைச் சேகரித்துவிட்டு இருவரையும் அங்கிருந்து அழைத்துச் சென்றுள்ளனர்.

இந்த அசாம்பாவிதத்தின் போது சந்தேகநபர்களுக்குச் சொந்தமான வாகனம் ஒன்றும் மக்களால் சேதப்படுத்தப்பட்டுள்ளது.

வலுவிழக்கும் ரூபாய் - தொடர்ந்து 320 ரூபாக்கு மேல் நிற்கும் டொலர்

வலுவிழக்கும் ரூபாய் - தொடர்ந்து 320 ரூபாக்கு மேல் நிற்கும் டொலர்

குழந்தையின் பாதுகாப்பு

அந்தப் பகுதியில் சில மாதங்களாக வசித்து வந்த இக்குடும்பத்தினர், அக்கம் பக்கத்தினருடன் அதிகமாகப் பழகுவதில்லை என அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும், இந்த குழந்தை அடிக்கடி அழுவதைக் கேட்டதாகவும் இதற்கு முன்பே குழந்தையின் இரு கைகளிலும் கட்டு (Plaster casts) போடப்பட்டிருந்த அளவுக்குக் காயங்கள் இருந்ததைத் தாங்கள் கவனித்ததாகவும் அண்டை வீட்டாரும் குழந்தையின் உறவினர்களும் குற்றம் சாட்டியுள்ளனர்.

கேரளாவை உலுக்கிய கொடூரம்: ஒன்றரை வயதுக் குழந்தை அடித்துக் கொலை - தாய் உட்பட இருவர் கைது! | Kerala Toddler Murdered By Mother And Lover

குழந்தையின் தந்தை, குழந்தை பிறப்பதற்கு முன்பே இறந்துவிட்டதாகவும் அதன் பின்னர் குடும்பத்திற்குள் ஏற்பட்ட குழப்பங்களால் குழந்தையின் பாதுகாப்பு கேள்விக்குறியாக இருந்ததாகவும் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

இச்சம்பவம் குறித்துப் பேசிய கேரள பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை அமைச்சர் பிந்து கிருஷ்ணா, இந்தத் துயரம் நெஞ்சை உலுக்குவதாக உள்ளது என்றும் குற்றவாளிகளுக்கு எதிராக மிகக் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் உறுதியளித்துள்ளார்.

இக்கொடூரக் கொலை குறித்துக் காவல்துறையினர் மேல் விசாரணைகளைத் தீவிரப்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

எரிபொருள் விநியோகம் குறித்து அமைச்சர் வெளியிட்ட அறிவிப்பு

எரிபொருள் விநியோகம் குறித்து அமைச்சர் வெளியிட்ட அறிவிப்பு

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!     

ReeCha
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை கொற்றாவத்தை, Toronto, Canada

13 Sep, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Scarborough, Canada

13 Sep, 2026
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Böblingen, Germany

14 Sep, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, கொக்குவில்

12 Sep, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, கோண்டாவில் மேற்கு, வெள்ளவத்தை

02 Sep, 2022
36ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோப்பளை, Scarborough, Canada

15 Sep, 2023
மரண அறிவித்தல்

சரவணை, கோண்டாவில் மேற்கு

14 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, கனடா, Canada

15 Sep, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, ஆனைக்கோட்டை, Frankfurt, Germany

14 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி தெற்கு

07 Sep, 2016
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சித்தங்கேணி, உடுவில், கொட்டாஞ்சேனை

13 Sep, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, அல்பி, France

02 Sep, 2011
90வது பிறந்தநாளும் 5ம் ஆண்டு நினைவஞ்சலியும்

யாழ்ப்பாணம், Markham, Canada

12 Sep, 2021
மரண அறிவித்தல்

மல்லாகம், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டுக்குழி, Brampton, Canada

12 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு, யோகபுரம், Paris, France, Tergnier, France, Chelmsford, United Kingdom

16 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு 3ம் வட்டாரம், பருத்தித்துறை, அல்வாய் வடக்கு, சூரிச், Switzerland

10 Sep, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, பிரான்ஸ், France

08 Sep, 2016