கொழும்பு வீதிகளில் மீண்டும் வலம்வரும் மண்ணெண்ணெய் வண்டில்கள்
நாட்டில் தற்போது எரிவாயு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில் அதனை பெறுவதற்கு நாளாந்தம் மக்கள் நீண்ட வரிசையில் காத்து கிடக்கின்றனர்.
இந்த நிலையில் தற்போது கொழும்பின் சில பகுதிகளில் மண்ணெண்ணெய் வண்டிகளை வைத்திருந்தவர்கள் மீண்டும் மண்ணெண்ணெய் விற்பனையை ஆரம்பித்துள்ளனர்.
எரிவாயு தட்டுப்பாடு காரணமாக பலர் மண்ணெண்ணை அடுப்பை பயன்படுத்தும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் மண்ணெண்ணெய்க்கு கடும் கிராக்கி நிலவி வருவதால் எரிபொருள் நிரப்பு நிலையங்களில் பெற்றோல், டீசலுக்கு பதிலாக மண்ணெண்ணெய் வாங்க மக்கள் வரிசையில் நிற்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
இவ்வாறு வரிசையில் காத்திருப்பதை விட வீட்டிற்கு அருகில் வரும் மண்ணெண்ணெய் வண்டியில் இருந்து மண்ணெண்ணெய் வாங்குவது இலகுவானது என்பதால் கொழும்பில் மண்ணெண்ணெய் வியாபாரம் வெற்றிகரமாக நடைபெற்று வருவதாக மண்ணெண்ணெய் விற்பனை செய்யும் நபர் ஒருவர் ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.
