அதிகரிக்கும் பதற்றம் - மத்திய கிழக்கிற்கு விரையும் போர் கப்பல் : ஆபத்தான அடுத்த நிமிடங்கள்
இஸ்ரேல் பாரிய அளவிலான விமான எதிர்ப்பு ஏவுகணைத் தட்டுப்பாட்டை எதிர்கொண்டுவருவதாக பிரபல அமெரிக்க ஊடகமான த வோல் ஸ்றீட் ஜெர்னல் தெரிவித்துள்ளது.
குறிப்பாக ஈரானின் பாலிஸ்டிக் எவுகணைகளைத் தடுத்து நிறுத்தக்கூடிய அரோ ரக எவுகணைகளின் கையிருப்பு இஸ்ரேலிடம் குறைந்து வருவதாகவும், ஈரானிடம் இருக்கின்ற ஏவுகணைகளின் எண்ணிக்கைக்கு நிகரான அரோ ஏவுகணைகள் இஸ்ரேலிடம் கிடையாது என்றும் அது தெரிவித்துள்ளது.
மத்திய கிழக்கில் போர் சூழ்நிலை அதிகரித்து வருகிறது, மேலும் ஈரான்-இஸ்ரேல் மோதலில் அமெரிக்காவும் ஈடுபடும் அபாயமும் ஓங்கியுள்ளது.
இஸ்ரேல்-ஈரான் சண்டை விடயத்தில் தொடக்கத்தில் ட்ரம்ப் எந்த கருத்தையும் தெரிவிக்கவில்லை. ஆனால், இப்போது ஈரானுக்கு எதிராக அதிரடியாக கருத்துக்களை கூறி வருகிறார்.
அது மட்டுமல்லாது அதிக போர் விமானங்களையும் யுஎஸ்எஸ் நிமிட்ஸ் விமானம் தாங்கி கப்பலையும், மத்திய கிழக்குக்கு அவர் அனுப்பி வைத்திருக்கிறார்.
ஈரானுக்கு பக்கத்தில் உள்ள நாடுகளில் ஆயிரக்கணக்கான அமெரிக்க ராணுவ வீரர்கள் நிலை நிறுத்தப்பட்டிருக்கின்றனர். சமயம் வரும் என்று அவர்கள் எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள்.
இது தொடர்பிலும், மத்திய கிழக்கில் அதிகரிக்கும் பதற்றம் தொடர்பிலும் விரிவாக ஆராய்கிறது ஐபிசி தமிழின் “உண்மையின் தரிசனம்” நிகழ்ச்சி...
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
