வீதியில் பயணித்துக்கொண்டிருந்த நபர் திடீர் மரணம்- அச்சத்தில் மக்கள்!
kilinochchi
death
northern province
By Kalaimathy
கிளிநொச்சியில் பிரதேச சபை சுகாதார ஊழியர் திடீரென வீதியில் மயங்கி வீழ்ந்து உயிரிழந்துள்ளமை கிளிநொச்சியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
கிளிநொச்சி கரைச்சி பிரதேச சபையில் பணியாற்றும் ஊழியர் ஒருவர் மதிய உணவிற்காக செல்வதாக புறப்பட்டுச் சென்ற சிறிது நேரத்தில் வீதியில் வீழ்ந்து உயிரிழந்துள்ளார்.
கிளிநொச்சி மாவட்டம் உதய நகர் பகுதியைச் சேர்ந்த 47 வயது மதிக்கத்தக்க விஜயகுமார் என்ற சுகாதார தொழிலாளியே உயிரிழந்துள்ளார்.
குறித்த சம்பவம் கிளிநொச்சி நகரில் திருநகர் வீதியில் அரச நில அளவைத் திணைக்களத்துக்கு அண்மித்த பகுதியில் இடம்பெற்றுள்ளது.
சம்பவம் தொடர்பில் சுகாதார தரப்பினர் மற்றும் பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளதாகவும் சாதாரணமாக பணிக்கு வந்தவர் திடீரென உயிரிழந்துள்ளமை குறித்து மக்கள் அச்சமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
1ம் ஆண்டு நினைவஞ்சலி