ஒரு வருடம் கழித்து கட்டுநாயக்கவில் சிக்கிய கொலையாளி!
கடந்த ஆண்டு ஜனவரி 10 ஆம் திகதி கலபொடவத்தை கொரொத்தொட்ட பகுதியில் ஒருவரை சுட்டுக் கொன்ற துப்பாக்கிதாரி கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேக நபர் இன்று (02) காலை துபாயில் இருந்து கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்தபோது குற்றப்பிரிவால் கைது செய்யப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
அதன்போது, ஹெய்யன்தொடுவ பகுதியை சேர்ந்த 27 வயது இளைஞர் ஒருவரே கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது நடவடிக்கை
2024.01.10 அன்று, கலபொடவத்தை கொரொத்தொட்ட பகுதியைச் சேர்ந்த 34 வயதுடைய ஒருவர் அழைத்துச் செல்லப்பட்டு, காவல்துறை சிறப்பு அதிரடிப்படை அதிகாரி போல் காட்டிக் கொண்டு சுட்டுக் கொல்லப்பட்டார்.
அதனைதொடர்ந்து, மேற்கு மாகாண தெற்கு குற்றப்பிரிவு தொடர்புடைய கொலை குறித்த விசாரணைகளைத் தொடங்கியிருந்தது.
அதன்படி, கொலையை செய்வதற்கு பயன்படுத்திய ஒரு ரிவோல்வரும் குற்றவாளிக்கு மோட்டார் சைக்கிள் ஓட்டுநராக செயற்பட்ட நபரும் முன்னதாக கைது செய்யப்பட்டிருந்தனர்.
நீதிமன்ற உத்தரவு
பின்னர் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் இந்த குற்றத்தில் ஈடுபட்ட துப்பாக்கிதாரி துபாய்க்கு தப்பிச் சென்றது தெரியவந்தது.
இந்த நிலையில், நாட்டிற்கு வந்தவுடன் கைது செய்யுமாறு குடிவரவு கட்டுப்பாட்டாளருக்கு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவின் பேரில், இன்று அதிகாலை கட்டுநாயக்க விமான நிலைய வருகை முனையத்தில் சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் கட்டுநாயக்க விமான நிலைய காவல் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதுடன், மேற்கு மாகாண தெற்கு குற்றப்பிரிவு மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
