தமிழர் பிரதேசத்தில் கிலோ கணக்கில் கடத்தப்பட்ட மான் இறைச்சி
மட்டக்களப்பில் (Batticaloa) 20 கிலோ மான் இறைச்சி கடத்தி சென்ற இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த கைது நடவடிக்கை இன்று (10) செங்கலடி கறுத்த பாலத்தில் இடம்பெற்றுள்ளது.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரிவிக்கையில், செங்கலடி கறுத்த பாலத்தில் காவல்துறையினர் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
கிடைத்த தகவல்
காவல்துறையினருக்கு கிடைத்த தகவல் ஒன்றினையடுத்து குறித்த கண்காணிப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இதன்போது, கரடியனாறு பிரதேசத்தில் இருந்து செங்கலடி பிரதேசத்தை நோக்கி பிரயாணித்த சிறியரக வாகனம் ஒன்றினுள் சோதனை நடத்தப்பட்டுள்ளது.
இதில், மறைத்து கடத்தி கொண்டு செல்லப்பட்ட 20 கிலோ மான் இறைச்சியை மீட்கப்பட்டுள்ளதுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நீதிமன்றில் முன்னிலை
அத்தோடு, கடத்தலுக்கு பயன்படுத்திய வாகனத்தையும் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
இதில் கைது செய்யப்பட்டவர்கள் செங்கலடி பிள்ளையார் கோவிலைச் சோந்த 32 வயதுடையவர் மற்றும் பங்குடாவெளி பிரதேசத்தைச் சேர்ந்த 44 வயதுடையவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இவர்களை நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை முன்னெடுத்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
