சாமர சம்பத் எம்.பி கைது : ரணில் எழுப்பிய கேள்வி...!

Parliament of Sri Lanka Ranil Wickremesinghe MP Chamara Sampath Dassanayake
By Sumithiran Apr 10, 2025 10:07 AM GMT
Report

எதிர்க்கட்சியின் பலமான குரலாக இருந்ததாலா நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத்(chamara sampath dassanayake) கைதானார் என முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க(ranil wickremesinghe) கேள்வியெழுப்பியுள்ளார்.

ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்பாக பதுளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்க கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டதற்கான காரணங்கள் குறித்து முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க சிறப்பு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.அதிலேயே இவ்வாறு கேள்வியெழுப்பியுள்ளார்.

மாகாண சபையின் நிலையான வைப்பு நிதியை ஒரு அரச வங்கியில் தவறாகப் பயன்படுத்தியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டு தொடர்பாக பதுளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சமீபத்தில் கைது செய்யப்பட்டார். இது தெடார்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

மைத்திரியின் அனுமதியுடன் வெளியிடப்பட்ட சுற்றறிக்கை

நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்கவின் குடும்ப உறுப்பினர்களை நான் சந்தித்தேன். நான் பிரதமராக இருந்த காலத்தில், அப்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் ஒப்புதலுடன் திறைசேரி செயலாளரால் மாகாண சபை நிதியை நிலையான வைப்பு கணக்குகளில் வைக்க முடியாது என்று ஒரு சுற்றறிக்கை வெளியிடப்பட்டது. அரசாங்க நிதி மற்றும் பிற ஒதுக்கப்பட்ட நிதிகள் இரண்டையும் ஒரே வருடத்திற்குள் செலவிட வேண்டும் அல்லது நிதி அமைச்சகம் அல்லது தொடர்புடைய மாகாண சபை அமைச்சகத்திற்குத் திருப்பி அனுப்ப வேண்டும் என்று சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. எதிர்கால திட்டங்களில் பயன்படுத்துவதற்காக அந்த நிதியை நிறுத்தி வைப்பது சட்டவிரோதமானது என்பதால், அந்த நடைமுறையை நிறுத்த நாங்கள் நடவடிக்கை எடுத்தோம்.

சாமர சம்பத் எம்.பி கைது : ரணில் எழுப்பிய கேள்வி...! | Ranil Special Statement On Mp Chamara Sampath

கவலைகளை எழுப்பிய சாமர சம்பத்

அந்த நேரத்தில், முதலமைச்சர் சாமர சம்பத் மற்றும் பல முதலமைச்சர்கள் தொடர்பில் கவலைகளை எழுப்பினர், மேலும் இதுபோன்ற வைப்புத்தொகைகள் ஏன் அனுமதிக்கப்படவில்லை என்று அவர்களுக்குத் தெரிவிக்கப்பட்டது. அதன்படி, அவர்கள் அந்த நிதியை நிலையான வைப்பு கணக்குகளிலிருந்து திரும்பப் பெற்றனர்.

சாமர சம்பத் எம்.பி கைது : ரணில் எழுப்பிய கேள்வி...! | Ranil Special Statement On Mp Chamara Sampath

இது ஊவா மாகாணத்திற்கு மட்டுமல்ல - பிற மாகாணங்களிலும் இதே போன்ற நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. அவர் முதலமைச்சராகப் பணியாற்றியபோது, தொடர்ந்து என்னுடன் தொடர்பு கொண்டார், மேலும் கல்வி மற்றும் பிற விஷயங்களில் நான் அவரை ஆதரித்தேன். இருப்பினும், நாங்கள் எதிர் அரசியல் கட்சிகளில் இருந்தோம்.

இரண்டு வாரங்களுக்குள் கிழக்கின் மற்றொரு அரசியல் பிரமுகர் கைது?

இரண்டு வாரங்களுக்குள் கிழக்கின் மற்றொரு அரசியல் பிரமுகர் கைது?

  தற்போது அமைச்சர் சமந்த வித்யாரத்ன அவர் மீது முறைப்பாடு ஒன்றை பதிவு செய்தார்.

 இந்த விவகாரம் ஆணைக்குழுவால் விசாரிக்கப்பட்டுள்ளது. ஒரு விசாரணையாலும் அவர் குற்றவாளி என நிரூபிக்கப்படவில்லை. சந்தேகத்திற்குள்ள நபராக கூட அறிவிக்கப்படவில்லை. விசாரணை நடப்பது பழைய சம்பவங்களை சார்ந்தே. புதிய குற்றச்சாட்டுகளோ சம்பவங்களோ அல்ல.

எப்படி நியாயமானதாக இருக்க முடியும்

மற்றொரு முக்கிய விடயம் என்னவென்றால், சாமர சம்பத் பதிலளித்தவுடன் அவரை கைது செய்ததாகவே அறிவிக்கப்படுகிறது. இவ்வாறு செய்வது எப்படி நியாயமானதாக இருக்க முடியும்


சாமர சம்பத் நாடாளுமன்றத்தில் அடிக்கடி பேசுபவர். அவர் எதிர்க்கட்சியின் பலமான குரலாக திகழ்கிறார். இந்நடவடிக்கைகள் அவரின் நாடாளுமன்ற செயற்பாடுகளுடன் தொடர்புடையதா என்பது பெரிய கேள்வி. எனவே, இந்த விடயத்தை அவர் நாடாளுமன்றத்தில் விசாரணைக்காக கேட்க வேண்டும். இது eாடாளுமன்ற உரிமை மீறலாக இருக்கிறதா என்பது விசாரணை செய்யப்பட வேண்டும்.”

 

35 ஆண்டுகளுக்கு பிறகு திறக்கப்பட்ட யாழ். பலாலி வீதி : சர்ச்சையை கிளப்பும் சுமந்திரன்

35 ஆண்டுகளுக்கு பிறகு திறக்கப்பட்ட யாழ். பலாலி வீதி : சர்ச்சையை கிளப்பும் சுமந்திரன்


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!  


ReeCha
மரண அறிவித்தல்

 துன்னாலை தெற்கு, துன்னாலை வடக்கு

24 Feb, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, பல்லவராயன்கட்டு

24 Feb, 2026
மரண அறிவித்தல்

ஏழாலை, Luzern, Switzerland

26 Feb, 2026
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, Aubervilliers, France

23 Feb, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு 3ம் வட்டாரம், Brampton, Canada

19 Feb, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, Wil, Switzerland

27 Feb, 2021
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, யாழ்ப்பாணம், திருகோணமலை, Markham, Canada

23 Feb, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, மானிப்பாய், வளசரவாக்கம், India, பளை, திருநாவற்குளம்

22 Feb, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய் வடக்கு, Krefeld, Germany

23 Feb, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, பரந்தன்

26 Feb, 2017
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

ஈச்சமோட்டை, உரும்பிராய், சிட்னி, Australia

23 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சாவகச்சேரி, Scarborough, Canada

27 Jan, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், இளவாலை இலங்கை ,லண்டன், United Kingdom

23 Feb, 2010
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, அளவெட்டி, Scarbrough, Canada

05 Mar, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025