தேசபந்து தென்னகோனுக்கு பிணை : நீதிமன்றம் அதிரடி உத்தரவு
புதிய இணைப்பு
தேசபந்து தென்னகோனை (Deshabandu Tennakoon) பிணையில் விடுவிக்குமாறு மாத்தறை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
22 நாட்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த தேசபந்து தென்னகோனை பிணையில் விடுவிக்குமாறு இன்று இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
வெலிகம – பெலென பகுதியிலுள்ள விருந்தகம் ஒன்றுக்கு முன்பாக 2023 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பில் காவல்துறை மா அதிபர் தேசபந்து தென்னகோன் கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இரண்டாம் இணைப்பு
விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள காவல்துறைமா அதிபர் தேசபந்து தென்னகோன், மாத்தறை நீதவான் நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டுள்ளார்.
முதலாம் இணைப்பு
விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள காவல்துறைமா அதிபர் தேசபந்து தென்னகோன் (Deshabandu Tennakoon) மீண்டும் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.
அதன்படி, இன்று (10) மாத்தறை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலையாகவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
2023 ஆம் ஆண்டு வெலிகம – பெலென பகுதியிலுள்ள விருந்தகம் ஒன்றுக்கு முன்பாக நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பில் காவல்துறைமா அதிபர் தேசபந்து தென்னகோன் மீது குற்றஞ்சாட்டப்பட்டிருந்து.
பிடியாணை பிறப்பிக்கப்பட்டது
கைது செய்ய திறந்த பிடியாணை பிறப்பிக்கப்பட்ட அவர் 20 நாட்கள் தலைமறைவாக இருந்த நிலையில் மார்ச் மாதம் 19 ஆம் திகதி காலை வழக்கறிஞர் குழுவுடன் நீதிமன்றத்தில் சரணடைந்தார்.
இந்த நிலையில் அன்றிலிருந்து (19.03.2025) இன்று வரை (10.04.2025) விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
