அமெரிக்காவில் ChatGPTயின் கற்பனைக் கதைகளை வைத்து தாய் - தம்பியை கொலை புலம்பெயர் சிறுவன்
அமெரிக்காவில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த 17 வயதான சிறுவன் ஒருவர், தனது தாயையும் தம்பியையும் கொலை செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளார்.
மேலும், தனது குடும்பத்தினரைக் கொல்வது தொடர்பான "கோட்பாட்டு யோசனைகள் அல்லது கற்பனைக் கதைகளை" ஆராய்வதற்காக அவர் இதற்கு முன்பு ChatGPT-ஐப் பயன்படுத்தியதாக அந்நாட்டு அரசுத் தரப்பு சட்டத்தரணி வெளிப்படுத்தியுள்ளனர்.
அமெரிக்காவின் மாசசூசெட்ஸின் ஆக்டனில் உள்ள தங்களது வீட்டில், தனது தாயார் சுதா வெங்கடேசன் (45) மற்றும் 14 வயது சகோதரர் சித்தார்த் அரவிந்த் ஆகியோரின் மரணங்களைத் தொடர்ந்து, 17 வயதான அர்ஜுன் அரவிந்த் மீது இரண்டு கொலைக் குற்றச்சாட்டுகளும் மேலும் பல குற்றச்சாட்டுகளும் சுமத்தப்பட்டுள்ளன.
அதிகாரப்பூர்வ காரணங்கள்
தனது குடும்பத்தைக் கொல்வது தொடர்பான கற்பனைக் காட்சிகள் அல்லது கற்பனைக் கதைகள் குறித்த தேடல்களுக்காக இணையத்தையும் ChatGPT-யையும் பயன்படுத்தியது உட்பட, அரவிந்த் சமீபகாலமாக கவலைக்குரிய நடத்தையை வெளிப்படுத்தியதை புலனாய்வாளர்கள் கண்டறிந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தனது குடும்பத்திற்கு எதிரான அச்சுறுத்தல்களுடன் தொடர்புடையதாகத் தோன்றும் கதாபாத்திரங்கள் மற்றும் சூழ்நிலைகளைக் கொண்ட கற்பனையான, கோதிக் பாணிக் கதைகளை உருவாக்க அந்தப் பதின்வயது சிறுவன் ChatGPT-ஐப் பயன்படுத்தியதாக கூறப்படுகிறது.
அரவிந்தின் தந்தையால் தனது குடும்பத்தினரைத் தொடர்புகொள்ள முடியாததால் காவல்துறைக்கு வழங்கப்பட்ட தகவலுக்கு அமைய கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அதேவேளையில், மரணத்திற்கான அதிகாரப்பூர்வ காரணங்கள் மருத்துவப் பரிசோதகரின் தீர்மானத்திற்கு உட்பட்டவை என்றும் அந்நாட்டு ஊடகங்கள் சுட்டிக்காட்டியுள்ளன.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |