மன்னர் சார்லஸின் முதல் பொதுநிகழ்வு - இலங்கை உள்ளிட்ட தெற்காசிய சமூகத்தினருக்கு கிட்டவுள்ள வாய்ப்பு
பிரித்தானிய மன்னர் மூன்றாம் சார்லஸ் தனது முதல் பொது நிகழ்வாக பிரித்தானியாவை தளமாகக்கொண்ட இலங்கை சமூகத்தை சந்திக்கவுள்ளார்.
மன்னர் சார்லஸின் பதவியேற்பின் பின்னர், பிரித்தானியா முழுவதும் வாழும் தெற்காசிய சமூகத்தினருக்கு ஸ்கொட்லாந்தில் உள்ள Edinburgh வரவேற்பு அளிக்கப்படவுள்ளது. இதன்போது இலங்கை உட்பட பல தெற்காசிய நாடுகளுடன் தொடர்புள்ளவர்கள் ஒன்றிணையவுள்ளார்கள்.
முதல் பொதுநிகழ்வு
இந்த நிகழ்வில் பிரித்தானியா முழுவதிலுமிருந்து இந்தியா, பாகிஸ்தான், பங்களாதேஷ், இலங்கை, நேபாளம், பூட்டான் மற்றும் மாலைத்தீவு ஆகிய நாடுகளைச் சேர்ந்த 200, 300 விருந்தினர்கள் பங்கேற்பார்கள் என பிரித்தானிய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
தேசிய சுகாதார சேவை முதல் கலை, ஊடகம், கல்வி, வணிகம் மற்றும் ஆயுதப் படைகள் வரை ஆற்றிய பங்களிப்பை அங்கீகரிப்பதே இந்த நிகழ்வின் நோக்கம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.