நீர்கொழும்பு சிறையில் உயிரிழந்தவர்களை முகநூலில் சரிபார்த்த நீதியமைச்சர் : கிண்டலடிக்கும் நாமல்
நீர்கொழும்பு சிறைச்சாலையில் நடந்த மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையை இலங்கையின் நீதி அமைச்சர் முகநூலில் சரிபார்த்தார் என சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர், நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்தார்.
ஐந்து மணி நேரமாக முகநூலைச் சரிபார்க்க முடியாததால், உயிரிழந்தவர்களின் சரியான எண்ணிக்கை தனக்குத் தெரியாது என்று நீதி அமைச்சர் பகிரங்கமாகக் கூறியதாகவும் ராஜபக்ச மேலும் தெரிவித்தார்.
கோட்டை பகுதியில் நடைபெற்ற ஒரு கூட்டத்தில் பங்கேற்றபோது நாமல் ராஜபக்ச இவ்வாறு கூறினார்.
சொல்வதை செய்யக்கூடிய ஒரு அரசியல் சக்தி
'இன்று, நாங்கள் நகரத்திற்குச் செல்லும்போது, எங்களுடன் ஏராளமான மக்கள் கூடுகிறார்கள். எங்களுக்கு வாக்களித்தவர்களும், வாக்களிக்காதவர்களும் எங்கள் கூட்டங்களுக்கு வருகிறார்கள்.

இந்த நாட்டிற்காக உழைத்த ஒரு அரசியல் சக்தியாக, மக்கள் எங்கள் மீது நம்பிக்கை வைத்துள்ளனர். நாங்கள் சொல்வதை செய்யக்கூடிய ஒரு அரசியல் சக்தி.'
அரசாங்கம் அளித்த நம்பிக்கைகள் சிதைந்துவிட்டன
இந்த அரசாங்கம் முடிவில்லாமல் பொய் சொல்லி ஆட்சிக்கு வந்தது. இப்போது, அரசாங்கம் சொன்ன பொய்களை நிரூபிக்க எந்த வழியும் இல்லாத நிலையில், அந்தப் பொய்யை மூடிமறைக்க மற்றொரு பொய்யைச் சொல்கிறது.

இந்த அரசாங்கம் இளைஞர்களுக்கும் முதியவர்களுக்கும் அளித்த நம்பிக்கைகள் சிதைந்துவிட்டன என்றும் நாடாளுமன்ற உறுப்பினர் கூறினார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |